திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 21ம் தேதி, நடைபெற உள்ளது.
திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 21ம் தேதி, பகல் 11:00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற உள்ளது.
ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய், மின்வாரியம், கூட்டுறவு, பொதுப்பணி, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் வணிகம் மற்றும் இதர வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர். எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1320581
No comments:
Post a Comment