Wednesday, February 17, 2016

தருமபுரிக்கு 1000 டன் நெல் அனுப்பிவைப்பு


நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் சன்னரக நெல் அரவைக்காக தருமபுரிக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையம் மூலம் நாள்தோறும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை நீடாமங்கலத்திலிருந்து 1000 டன் எடையுள்ள நெல் மூட்டைகள் நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு நீடாமங்கலத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு 75 லாரிகளில் கொண்டுவரப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்டு அரவைக்காக தருமபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

source : Dinamani

No comments:

Post a Comment