பெரியகுளம் பகுதியில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை விவசாயிகள் பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். உடனடி விளைச்சலுக்காக மண்ணை தொடர்ச்சியாக ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இந்த உரம் பயன்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு மண்ணின் வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர். இயற்கைக்கு மாறும் விவசாயிகள் மண்ணை உழுது, இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், புண்ணாக்கு கரைசல், சணம்பு உட்பட கீரைச்செடிகளை போட்டு பயிர் செய்கின்றனர். இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.
இது குறித்து விவசாயி பெருமாள் கூறுகையில், வெள்ளைப்பூண்டின் அனைத்துப்பகுதிகளும் மருந்துப் பொருளாக பயன்படுகிறது. குறிப்பாக இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து நிலத்தில் கொட்டி உழும்போது மண்ணில் தீங்கு விளைக்கும் வேர்புழுக்கள் சாகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால், வாழை, கரும்பு , தென்னை உட்டபட பல்வேறு வகையான பயிர்களும் விளைச்சல் அதிகரிக்கும்.
Source : Dinakaran
அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர். இயற்கைக்கு மாறும் விவசாயிகள் மண்ணை உழுது, இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், புண்ணாக்கு கரைசல், சணம்பு உட்பட கீரைச்செடிகளை போட்டு பயிர் செய்கின்றனர். இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.
இது குறித்து விவசாயி பெருமாள் கூறுகையில், வெள்ளைப்பூண்டின் அனைத்துப்பகுதிகளும் மருந்துப் பொருளாக பயன்படுகிறது. குறிப்பாக இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து நிலத்தில் கொட்டி உழும்போது மண்ணில் தீங்கு விளைக்கும் வேர்புழுக்கள் சாகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால், வாழை, கரும்பு , தென்னை உட்டபட பல்வேறு வகையான பயிர்களும் விளைச்சல் அதிகரிக்கும்.
Source : Dinakaran
No comments:
Post a Comment