Monday, September 21, 2015

செப்.23-இல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்



உடுமலை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 23) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோட்டாட்சியர் .சாதனைக்குறள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உடுமலை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணி அளவில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment