மழைக்கு பின் நெற்பயிரில் தோன்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்துவலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை. வலங்கைமான் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் சூழ்ந்த நீர் வடிந்த நிலையில் தற்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் சில இடங்களில் தென்படுகிறது. தற்போதைய காலநிலையில் நெற்பயிரில் தோன்றும் குருத்துபூச்சி மற்றும் இலைசுருட்டுபுழுவை கட்டுபடுத்த ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோ குளோரைடு என்ற மருந்தை 400 கிராம் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இளம்பயிரில் காணப்படும் ஆனை கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோர்பைரிபாஸ் 500 மிலி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். தற்போது நிலவும் பருவமழையின் காரணமாக நெற்பயிரில் பாக்டீரியல் இலைகருகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைகட்டுபடுத்த 20 சதம் பசும்சாண கரைசலை தெளிக்க வேண்டும். 40 கிலோ பசும் சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊரவைத்து அதனுடன் 1 கிலோ சூடோமோனாசை இட்டு கலக்க வேண்டும். அடுத்த நாள் தெளிந்த சானகரைசலை வடிகட்டி 100 லிட்டர் தண்ணீரில் சேர்ந்து தெளிக்க வேண்டும். அல்லது 1 கிலோ சூடோமோனாசை 1 லிட்டர் புளித்த தயிருடன் 200 லிட்டர் தண்ணீரில் சேர்ந்து தெளித்து கட்டுபடுத்தலாம். மேலும் விபரங்களை அருகில் உள்ள வேளாண்விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment