Wednesday, December 16, 2015

மானியத்தில் டிராக்டர் பவர் டில்லர் வழங்கல்


சிவகங்கையில் விவசாயிகள் 14 பேருக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டிராக்டர், பவர் டில்லர்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார். மாவட்ட அளவில் விவசாய பணிகளில் ஈடுபடும், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கும் நோக்கில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7 விவசாயிகளுக்கு ரூ.38.03 லட்சம் மதிப்பிலான 7 டிராக்டர்கள், ரூ.8.75 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது.
இதில், விவசாயிகள் பங்களிப்பு தொகை ரூ.29.28 லட்சம். அதே போன்று, 7 விவசாயிகளுக்கு ரூ.9.62 லட்சம் மதிப்பிலான பவர்டில்லர் வழங்கப்பட்டது. இதற்கு மானியம் ரூ.4.40 லட்சம். விவசாயிகள் பங்களிப்பு தொகை ரூ.5.22 லட்சம்.


Source : Dinamalar

No comments:

Post a Comment