உளுந்து சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.பழநி வட்டார விவசாயிகள் நல்ல வடிகால் வசதி உள்ள அனைத்து நிலங்களிலும் உளுந்து சாகுபடி செய்யலாம். செப்டம்பர்,அக்டோபர் காலங்களில் வம்பன் 2,3,4 மற்றும் ஏ.பி.கே.1 ஆகிய ரகங்களை பயிரிடலாம். ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் டி.எம்.வி.1 ரகத்தை பயிரிடலாம். பிப்ரவரி,மார்ச் மாதங்களில் வம்பன் 4 மற்றும் டி.எம்.வி.1 ரகத்தை பயிரிடலாம். எக்டேருக்கு 20 கிலோ விதையை 30*10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைகளை துத்தநாக சல்பேட் 100 பிபி.எம் கரைசலில் 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் கரைசல் என்ற அளவில் 3 மணி நேரம் ஊர வைத்து விதைக்க வேண்டும்.
ஊறிய விதைகளை நிழலில் ஆரம்ப ஈர நிலை வரும் உலர வைத்து 1 மாதம் வரை உபயோகிக்கலாம். 1 எக்டேருக்கு தேவையான விதையுடன் 2 பாக்கெட் ரைசோபியம் (பயிறு) உயிர் உரத்தை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு டிரைகோ டெர்மாவிரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். எக்டருக்கு 12.5 மெட்ரிக் டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கடைசி உழவுக்கு முன் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட வேண்டும். பொது பரிந்துரையின்படி இறவை சாகுபடியாளர்கள் எக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்துக்கள் இட வேண்டும். மானாவாரி விவசாயிகள் எக்டேருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்துக்கள் இட வேண்டும்.இரவையில் எக்டேருக்கு 500 மில்லி புளுகுளோரலின் களைக்கொல்லியை 625 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 3ம் நாள் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின், 25வது நாள் கைக்களை எடுக்க வேண்டும். மானாவாரி நிலங்களில் 20 மற்றும் 40வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
உளுந்துக்கு மொத்தமாக 4 அல்லது 5 முறை நீர் பாய்ச்சினால் போதுமானது ஆகும். குறிப்பாக பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் வறட்சியை தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டுமென பழநி வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : Dinakaran
ஊறிய விதைகளை நிழலில் ஆரம்ப ஈர நிலை வரும் உலர வைத்து 1 மாதம் வரை உபயோகிக்கலாம். 1 எக்டேருக்கு தேவையான விதையுடன் 2 பாக்கெட் ரைசோபியம் (பயிறு) உயிர் உரத்தை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு டிரைகோ டெர்மாவிரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். எக்டருக்கு 12.5 மெட்ரிக் டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கடைசி உழவுக்கு முன் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட வேண்டும். பொது பரிந்துரையின்படி இறவை சாகுபடியாளர்கள் எக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்துக்கள் இட வேண்டும். மானாவாரி விவசாயிகள் எக்டேருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்துக்கள் இட வேண்டும்.இரவையில் எக்டேருக்கு 500 மில்லி புளுகுளோரலின் களைக்கொல்லியை 625 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 3ம் நாள் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின், 25வது நாள் கைக்களை எடுக்க வேண்டும். மானாவாரி நிலங்களில் 20 மற்றும் 40வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
உளுந்துக்கு மொத்தமாக 4 அல்லது 5 முறை நீர் பாய்ச்சினால் போதுமானது ஆகும். குறிப்பாக பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் வறட்சியை தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டுமென பழநி வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : Dinakaran
No comments:
Post a Comment