Sunday, December 20, 2015

தஞ்சையில் நாளைகறவை மாடு வளர்ப்புப் பயிற்சி


தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (டிச. 22) நடைபெறவுள்ளது.
பயிற்சிக்கு வரும் அனைவரும் தவறாமல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் எனவும், மேலும் தகவல்களுக்கு 98424 55833, 04362 - 204009 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மையத் தலைவர் என். புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment