Sunday, December 20, 2015

கோபி பாசன பகுதிக்கு 43,500 கிலோ விதை

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப்பகுதியான, கோபி, டி.என்.பாளையம் பகுதியில், தண்ணீர் திறக்கப்பட்டதால், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் சாகுபடி செய்ய உள்ளனர். இப்பட்டத்துக்கு, கோ-51, ஏ.டி.டி., 45, 39 ஆகிய ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். இதற்காக, கோபி, டி.என்.பாளையம் வட்டாரங்களில், 18 ஆயிரத்து, 500 டன், தனியார் விற்பனை நிலையங்களில், 25 ஆயிரம் டன் சான்று பெற்ற விதைகள் இருப்பில் உள்ளன. விவசாயிகள், விதை நேர்த்தி செய்து, விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, மூன்று கிலோ சான்று பெற்ற விதை என்ற அளவில், திருந்திய நெல் சாகுபடி முறையில், மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து, வரிசை நடவு செய்ய வேண்டும்.

Source : Dinamalar

No comments:

Post a Comment