முத்துப்பட்டியில் விவசாயிகளுக்கு "திருந்திய நெல் சாகுபடி'யில் உயர் தொழில் நுட்ப பரிமாற்ற பயிற்சி அளிக்கப்பட்டது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் தனபாலன் வரவேற்றார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், உதவி பேராசிரியர் விமலேந்திரன், வேளாண் அலுவலர் சீனிவாசன் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
வயலில் நடக்கும் பயிற்சியில் நெல் விதைப்பு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மேலாளர் தம்பித்துரை நன்றி கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment