Thursday, February 18, 2016

காய்கனி பயிரிடும்விவசாயிகள் கவனத்திற்கு...

சாகுபடியில், 40 சதவீத மானியத்தில் காய், கனி விதைகளை பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடலாம் என, தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் தோட்டக்கலை துறை, துணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி கூறியதாவது:காய்கனி பயிரிடும் விவசாயிகள் சாகுபடி பரப்பிலிருந்து, 40 சதவீதம் மானியம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடி, காய்கனி விதைகளை வாங்கி பயன் பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment