கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை காக்க எப்படி என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.கோடை காலம் நெருங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் இப்போதே துவங்கி விட்டது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க நிழல் தேடி அலையும் சூழல் நிலவுகிறது. இதனால் கோடையில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து பழநி கால்நடைத்துறை அதிகாரிகளிடம் கூறியதாவது, கோடையில் ஈக்களின் தொல்லையால் கறவை மாடுகள் அமைதியின்றி காணப்படும். ஈக்கள் அவற்றின் மீது அமர்வதாலும், கறவை மாடுகளைச் சுற்றி வட்டமிடுவதாலும் தொந்தரவுகள் ஏற்படும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்படக் கூடும். தொழுவங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
சாணம், சிறுநீர் போன்ற கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். முடிந்த வரை கடுமையான வெப்ப காலங்களில் கறவை மாடுகள் மீது 2 அல்லது 3 முறை தண்ணீர் தெளிக்கலாம். வெயில் அதிகமாக இருக்கும்போது மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. வெப்பத்தின் அளவு குறைவாக உள்ள காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்புவது நல்லது. கோடைகாலங்களில் இறைச்சி கோழிகளின் இறப்பு விகிதம் அதிகளவு இருக்கும். வெயில் காலங்களில் முட்டை கோழிக்கு 2.5 சதுர அடியும், இறைச்சி கோழிக்கு 1.5 சதுர அடியும் இடவசதி வேண்டும். பக்கவாட்டில் சாக்குகளை தண்ணீரில் நனைத்து தொங்க விட வேண்டும். வெப்பம் அதிகம் காரணமாக தளர்ச்சி அடையும்போது வைட்டமின் சி 500 மில்லி கொடுக்கலாம். எருமையின் தோல் பசு இனத்தின் தோலைவிட 5 மடங்கு கெட்டியானது.
கறவை எருமைகள் சினைப்பருவத்திற்கு வரும் அறிகுறிகள் கோடையில் வெளிப்படையாகக் தெரியாது. இதனை ஊமைப்பருவம் என்று அழைப்பர். கோடைகாலத்தில் எருமைகளின் இனவிருத்தித்திறனை அதிகரிக்க, நிழலான இடத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். அருகில் குளங்கள் இருந்தால் நீக்க விடலாம். அவ்வசதி இல்லாவிட்டால் நீரை தெளிக்கலாம். எருமைகளை எப்போதும் கட்டி வைக்காமல் விசாலமான அடைப்புகளில் சுதந்திரமாக திரியவிட வேண்டும். கோடையில் ஏற்படும் வறட்சியினால் ஆடுகளுக்கு மேய்ச்சல் கிடைப்பது அரிது. கோடையில் குடற்புழு தொல்லை இருப்பதால் குடற்புழு நீக்கம் செய்திடுவது நல்லது. இவ்வாறு கூறினர்.
Source : Dinakaran
சாணம், சிறுநீர் போன்ற கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். முடிந்த வரை கடுமையான வெப்ப காலங்களில் கறவை மாடுகள் மீது 2 அல்லது 3 முறை தண்ணீர் தெளிக்கலாம். வெயில் அதிகமாக இருக்கும்போது மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. வெப்பத்தின் அளவு குறைவாக உள்ள காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்புவது நல்லது. கோடைகாலங்களில் இறைச்சி கோழிகளின் இறப்பு விகிதம் அதிகளவு இருக்கும். வெயில் காலங்களில் முட்டை கோழிக்கு 2.5 சதுர அடியும், இறைச்சி கோழிக்கு 1.5 சதுர அடியும் இடவசதி வேண்டும். பக்கவாட்டில் சாக்குகளை தண்ணீரில் நனைத்து தொங்க விட வேண்டும். வெப்பம் அதிகம் காரணமாக தளர்ச்சி அடையும்போது வைட்டமின் சி 500 மில்லி கொடுக்கலாம். எருமையின் தோல் பசு இனத்தின் தோலைவிட 5 மடங்கு கெட்டியானது.
கறவை எருமைகள் சினைப்பருவத்திற்கு வரும் அறிகுறிகள் கோடையில் வெளிப்படையாகக் தெரியாது. இதனை ஊமைப்பருவம் என்று அழைப்பர். கோடைகாலத்தில் எருமைகளின் இனவிருத்தித்திறனை அதிகரிக்க, நிழலான இடத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். அருகில் குளங்கள் இருந்தால் நீக்க விடலாம். அவ்வசதி இல்லாவிட்டால் நீரை தெளிக்கலாம். எருமைகளை எப்போதும் கட்டி வைக்காமல் விசாலமான அடைப்புகளில் சுதந்திரமாக திரியவிட வேண்டும். கோடையில் ஏற்படும் வறட்சியினால் ஆடுகளுக்கு மேய்ச்சல் கிடைப்பது அரிது. கோடையில் குடற்புழு தொல்லை இருப்பதால் குடற்புழு நீக்கம் செய்திடுவது நல்லது. இவ்வாறு கூறினர்.
Source : Dinakaran
No comments:
Post a Comment