Wednesday, August 3, 2016

மானாவாரி நிலங்களில் பருத்தி பயிரிட ஆலோசனை

மானாவாரியில் பருத்தி பயிரிட எல்.ஆர்.ஏ-5166, சுமங்கலா, கே-11, எஸ்.வி.பி.ஆர்-2, கே.சி-2 ஆகியவை ஏற்ற ரகங்கள். 45*15 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து எக்டேருக்கு 15 கிலோ என்ற அளவில் விதைக்க வேண்டும். பஞ்சு நீக்கிய விதையுடன் 3 கிராம் பாலிகோட், கார்பன்டைசிம் 2 கிராம், இமிடர் குளோபரிட் 7 கிராம், சூடா மோனாஸ் ஃப்ளூரசன்ஸ் 10 கிராம், அசோபாஸ் 40 கிராம் கலந்து விதைப்பதால் விதைத்த 45வது நாள்வரை சாறு உறிஞ்சும் பூச்சிகளிலிருந்து பயிரினை காத்து ஆரம்பத்தில் நல்பயிர் வளர்ச்சி அடைய முடியும். 

நுண்ணூட்டச்சத்தாக எக்டேருக்கு சிங்க் சல்பேட் 50 கிலோ அடியுரமாக அளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால், விளைச்சல் அதிகரிக்கிறது. பயிரின் வயது 150 நாட்களுக்குள் இருக்கும்பேது, 60 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 150 நாட்களுக்கு மேல் ஆகும்போது தழைச்சத்து 80 கிலோவிற்கு மேல் இடவேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு தழைச்சத்து 120 கிலோ இடவேண்டும். மேற்காணும் உரத்தில் மணிச்சதது முழுவதும் மற்றும் தழைச்சத்து, சாம்பல் சத்தினை பாதி அடியுரமாகவும் இட வேண்டும்.

களை முளைப்பதற்குமுன் ஃப்ளூகுளோரலின் 2.2 லிட்டர் அல்லது பென்டிமெத்தலின் 3.3 லிட்டர் ஆகியவற்றில் ஒன்றினை விதைத்த 3வது நாள் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். உயிர் உரமாக 2 ஆயிரம் கிராம் அசோஸ்பரில்லத்துடன் 2 ஆயிரம் கிராம் பாஸ்போ பாக்டீரியா இட வேண்டும். ரசாயன உரங்களாக இருந்தால் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை பெற்ற பின்பு உரமிட வேண்டும். பரிசோதனை செய்யாத நிலங்களுக்கு களை முளைப்பதற்கு முன் ஃப்ளூகுளோராலின் 2.2 லிட்டர், பென்டிமெத்தலின் 3.3 லிட்டர் ஆகியவற்றில் ஒன்றினை விதைத்த 3வது நாள் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.  
அடி உரமாக எக்டேருக்கு 50 கிலோ சிங்க் சல்பேட் அளித்தால் நுண்ஊட்ட சத்து அளிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ அல்லது பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Source : Dinakaran

No comments:

Post a Comment