Wednesday, August 24, 2016

சிறுதானியம் பயிர் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

திருக்கோவிலூர் ஒன்றியம் ஜி.அரியூரில் வேளாண்மைத்துறை சார்பில் ஆட்மா திட்டத்தின் கீழ் பிரதான்மந்திரி கிரிஷிசஞ்சயி யோஜனா திட்டத்தின் கீழ் சிறுதானியம் பயிர் உற்பத்தி பற்றிய வேளாண்மை விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. சுமார் 300 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்களான சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, தினை, வரகு பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளிடையே சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி விவசாயிகளை வரவேற்று சிறுதானிய உணவின் அவசியம், பயன்கள், சத்துக்கள் பற்றி விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து கம்பு சாகுபடியில் உற்பத்தியை பெருக்க ஏற்ற ரகங்கள், விதையளவு, விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல், நாற்றங்கால் அமைத்தல், கம்பு நடவு, பயிர் இடைவெளி, நீர், களை மற்றும் உரமேலாண்மை பற்றி வேளாண்மை அலுவலர் ராஜா விளக்கினார். கம்பில் உயிர் உரங்கள் விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சியும் அளித்தனர்.

 வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணசாமி நுண்உரம், பயன்பாடுகள் பற்றியும், ஊட்ட மேம்பாடு பற்றியும் தொழுவுரம் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்து கூறினார். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், சிறுதானியத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி, பூஞ்சாண் கொல்லிகள் பற்றி உதவி வேளாண்மை அலுவலர்கள் ஞானவேல், குமார், மகாதேவன், மணிவேல், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கூறினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார். 

Source : Dinakaran

மண் மகத்துவம் அறியும் மண் ஆய்வு


t

மண்ணில் உள்ள பிரச்னைகளை அறிந்து சீர்திருத்தம் செய்யவும், சத்துக்களின் நிலை அறிந்து சமச்சீர் உரமிடவும், உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரிக்கவும் மண் ஆய்வு அவசியம். உரத்தேர்வு, உரமிடும் காலத்தை அறிந்திடவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் பெற்றிடவும் மண் ஆய்வு அவசியமாகிறது.
மண் ஆய்வுக்கு ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் இருந்து மண் மாதிரி சேகரிக்க வேண்டும். மரநிழல், வரப்பு வயலோரம், தண்ணீர் தேங்கும் பகுதி, எரு, உரம் கொட்டிய இடம், உரமிடப்பட்ட நிலம் ஆகியவற்றில் மண் மாதிரி சேகரிக்கக்கூடாது. நிலத்தை 'வி' வடிவில் வெட்டி மண் மாதிரி சேகரிக்க வேண்டும்.நெல், கம்பு பயிரிட நிலத்தில் பல இடங்களில் மண் மாதிரி சேகரிக்க வேண்டும். நிலக்கடலைக்கு அரை அடி ஆழம், பருத்தி, கரும்பு 4 அடி ஆழம், வளர்ந்த தென்னை பழப்பயிர் 2 அடி ஆழம் வரை நிலத்தை வெட்டி மண் மாதிரி சேகரிக்க வேண்டும். வெட்டப்பட்டுள்ள குழியின் இரு பக்கங்களிலும் கீழாக அரை அங்குல கனத்தில் மண்ணை செதுக்கி எடுக்க வேண்டும். சேகரித்த மண்ணை நன்றாக கலந்து கால்பங்கீட்டு முறையில் துணிப்பை, பாலிதீன் பையில் சேகரிக்க வேண்டும்.
நுண்ணுாட்ட மண் ஆய்வுக்கு மண்வெட்டி, தட்டு போன்ற உலோகப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மரக்குச்சி கொண்டு மண்ணை எடுக்க வேண்டும். பாசனநீர் பரிசோதனைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து வர வேண்டும். மண் மாதிரி ஆய்வுக் கட்டணம் 20 ரூபாய் (பேரூட்டம் 10 ரூபாய், நுண்ணுாட்டம் 10 ரூபாய்). பாசன நீர் ஆய்வு கட்டணம் 20 ரூபாய். பழப்பயிர் நடுவதற்கு முன் 4 க்கு 3 என்ற அளவில் குழி வெட்டி அடிக்கு ஒரு மண் மாதிரி வீதம் குழிக்கு நான்கு மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
- சே.கனகராஜ், திட்ட இயக்குனர்,
வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை, மதுரை
.

Source : Dinamalar

கால்நடை வளர்ப்பில் ஒழியுமா மூட பழக்கம்




கால்நடை வளர்ப்பில் மூடப்பழக்க வழக்கங்களை இந்த நூற்றாண்டிலும் விவசாயிகள் பின்பற்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. லாபமும் கணிசமாக குறையும்.
கால்நடைகளுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு. அறிவியலும் நவீன மருத்துவமும் முன்னேறி வரும் இக்காலத்தில் தவறான கருத்துக்களாலும், மூட 
நம்பிக்கைகளாலும், கொடிய மருத்துவம் செய்தல், தகுதியற்றவர்களால் மேற்கொள்ளும் மருத்துவத்தை தவிர்த்தல் வேண்டும். இச்செயல்களை விவசாயிகள் எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கக்கூடாது.
நாவரஞ்சி எடுத்தல்: கிராமங்களில் 'நாவரஞ்சி எடுத்தல்' என்ற பழக்கம் உண்டு. இம்முறைப்படி தீவனம் சாப்பிடாத கால்நடைகளின் நாக்கை வெளியே இழுத்து கத்தியால் சுரண்டி நாக்கின் மேலும், கீழும் உள்ள திசுக்களை அழித்து கொன்று விடுவார்கள். இதனால் வலி ஏற்பட்டு கால்நடைகள் அறவே தீவனம் சாப்பிடாது. இரண்டு நாட்கள் கழித்து தீவனம் சாப்பிட துவங்கும். நாக்கில் நாவரஞ்சி விழுந்து விட்டது என இந்த கொடூர வைத்தியத்தை கையாள்கின்றனர்.
செலைக்குத்துதல்: 'செலைக்குத்துதல்' எனும் வழக்கம் நாவரஞ்சி எடுத்தலை விட கொடுமையானது. இதன்படி தீவனம் சாப்பிடாத கால்நடையின் நாக்கினை வெளியே இழுத்து பிடித்து கொண்டு, நாக்கின் அடிப்பாகத்தில் காணும் ரத்தக் குழாயினை கூரிய ஊசி கொண்டு குத்தி விடுவார்கள். 
குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறும். பின் வைக்கோலினால் கயிறு போல் தயார் செய்து நாக்கின் அடியில் இருந்து மேல்தாடையோடு சேர்த்து இறுக்கி கட்டி விடுவார்கள். இதனால் கால்நடைகள் இரண்டு நாட்களுக்கு நாக்கை அசைக்க முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் கொடூரமான துயரத்திற்கு ஆளாகும். பின்னர் தீவனம் சாப்பிட ஆரம்பிக்கும்.
வைக்கோல் எரிப்பு: அதிக நேரம் காளைகள் வேலை செய்வதாலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தால் உடலில் நீர்ச்சத்து அளவு குறைந்து, அவை கீழே விழுந்து விடும். இதனை அறியாமல் மாடுகளின் அருகில் வைக்கோலை போட்டு கொளுத்துவார்கள். கண்களில் மிளகாய் பொடியை தூவுவார்கள். 
வாலை பற்களால் கோரமாக கடித்து புண் ஏற்படுத்துவர். தார் குச்சியின் நுனியால் மர்ம உறுப்பில் வலி எடுக்கும்படி குத்துவார்கள். இதனால் சில மாடுகள் சூடு தாங்காமலும், மரண வலியை தாங்க முடியாமல் கடும் துயரத்துடன் எழுந்து விடுகின்றன. சில நேரங்களில் இப்படி செய்யும்போது அவை நினைவிழந்து இறந்து விடுவதும் உண்டு.
சுண்ணாம்பு பூச்சு: மாடுகள் சண்டையிடும்போதும், விபத்துக்களாலும் கொம்பு முறிவதும், கொம்பு கழன்று விழுவதும் இயற்கை. இதற்கு வைத்தியம் செய்கிறோம் என்ற பெயரில் கருப்பட்டி மற்றும் சுண்ணாம்பினை சேர்த்து அரைத்து காயமடைந்த கொம்பில் பூசி விடுவார்கள். போதாக்குறைக்கு தலை முடியை கொத்தாக எடுத்து கொம்பை சுற்றிலும் கட்டி விடுவர். பத்து நாட்கள் கழித்து முடியை பிய்த்து வலுக்கட்டாயமாக இழுக்கும் போது கால்நடைகள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவிக்கின்றன.
எருக்கம்பால் நச்சு: கறவை மாடுகள் சினைப்பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான பெண் உறுப்பில் எருக்கம் பாலை இடுவார்கள். சில கால்நடைகள் நோயின் காரணமாகவோ அல்லது நச்சு தாவரங்களை உண்பதாலோ சோர்ந்தும், உடல் சிலிர்ப்புடன் காணப்படும். இதனை தவறாக புரிந்து கொண்டு ஓணான், மாட்டின் மேல் விழுந்துள்ளது எனக்கருதி துண்டு துணியை கழுத்தில் இறுக்கி கட்டி விட்டு மூச்சு விட முடியாமலும், நாக்கை வெளியே தள்ளும் அளவுக்கு கொடுமை செய்வர்.
வெந்த புண்ணில் வேல்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கினால் கால் குளம்புகளில் புண்கள் ஏற்படும். இப்புண்ணில் பினாயில் கிருமி நாசினியை ஊற்றுகின்றனர். இதனால் புண் வெந்து மாடுகளுக்கு மேலும் வேதனையை தரும். இக்கொடூரமான சிகிச்சை முறைகள் எல்லாம் முறையானவை அல்ல. இவற்றால் ஏற்படும் வேதனைகளை வாயிருந்தால் கால்நடைகள் சொல்லி நொந்து சாபமிட்டிருக்கும். இக்கொடூர காரியங்களில் நெஞ்சில் ஈரமில்லாத மனிதர் சிலர் ஈடுபடும்போது, ''நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்...'' என சுப்பிரமணிய பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
- டாக்டர் வி.ராஜேந்திரன்,
முன்னாள் இயக்குனர்,
கால்நடை பராமரிப்பு துறை, நத்தம்
.

Source : Dinamalar

மரத்தை நடவு செய்யும் பேக்கிங் தொழில்


t

'உழைப்புக்கு ஓய்வு இல்லையே' என மண்வெட்டியை கையில் பிடித்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. துவக்கத்தில் பாலிதீன் பைகளில் மண் நிரப்பி பூச்செடிகளை வளர்த்தார்.
செடிகளுக்கு உரமிட்டு, தண்ணீர் ஊற்றி பக்குவமாக வளர்த்ததால் பூக்கள் பூத்து குலுங்கின. படிப்படியாக பூச்செடிகளுடன், மரக்கன்றுகளையும் வளர்த்தார். உழைப்பை மூலதனமாக கொண்டு படிப்படியாக முன்னேறி நர்சரி கார்டன் அமைத்தார். 
மூன்று ஆண்டுகளில் பிரபலமடைந்தார். இவரது நர்சரியில் 27 நட்சத்திர மரங்கள், 500-க்கும் மேற்பட்ட மரக்கன்று வகைகள், 300-க்கும் மேற்பட்ட செடி வகைகள் அணி வகுத்து நிற்கின்றன.
அவர் கூறியது: மரங்கள் வளர்க்க ஆர்வமாக இருந்தாலும் தரமான கன்று கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. அதை தவிர்க்க பொழுது போக்காக இந்த தொழிலை ஆரம்பித்தேன். இயற்கை விவசாய முறையில் நர்சரி பண்ணை வைத்துள்ளேன். அரிய வகை மூலிகை, மரம், செடி, கொடி வகைகளை வளர்க்கிறேன். செடியாக மட்டுமன்றி உடனே பலன் தரும் வகையில் மரங்களையும் பேக்கிங் முறையில் நடவு செய்து தருகிறேன். ஆன்லைன் பதிவு மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறேன். விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தரமான கன்றுகளை தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம், என்றார்.
தொடர்புக்கு 98430 80275.
டி.செந்தில்குமார், காரைக்குடி
.

Source : Dinamalar

நீர் மேலாண்மை தொழில்நுட்பம்


t

மதுரை தென்பழஞ்சியை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி சிவராமன். இவர் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் மிளகாய் விளைவிக்கிறார். ஊடுபயிராக அகத்தி கீரையை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். மழையின்றி வறண்ட பூமியில் நெல் பயிரிட இயலாது. நெல்லிற்கு அதிகளவு தண்ணீர் தேவை என்பதால் மாற்றுப்பயிர் குறித்து சிவராமன் யோசித்தார். விளைவு நீர் மேலாண்மை தொழில்நுட்பம் இவருக்கு கை கொடுத்தது.
அவர் கூறியதாவது: ஒரு கிலோ நெல் சாகுபடி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே குறைந்தளவு நீரில் அதிக மகசூல் பெற ஒரே வழி நீர் மேலாண்மை தொழில்நுட்பம் மட்டுமே. பொதுவாக மழை பெய்தால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பும். சென்ற ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், இந்த ஆண்டும் போதிய மழை இல்லாததாலும் கண்மாய் பாசனத்தை நம்பிய விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய வழியில்லை. எனது வயலில் உள்ள கிணற்றில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அதை நம்பி 60 சென்டில் மிளகாய் பயிரிட்டேன். 
ஊடுபயிராக அகத்தி கீரையை நடவு செய்தேன். அகத்தி மூலம் மாதம் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அகத்தி பயிரிட்டுள் ளதால், வெயில் தாக்கத்திலிருந்த மிளகாயை பாதுகாக்கிறது. தரையும் ஈரமாக இருந்து கொண்டே இருக்கும்.
வாரம் இருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மிளகாய் ஆறு மாதங்கள் காய்க்கும். மிளகாய்க்கு நல்ல விலை உள்ளது. அனைத்து செலவுகளும் போக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தவிர அகத்தியிலும் நல்ல வருமானம் உள்ளது. சொட்டுநீர் பாசன முறையில் மிளகாய், அகத்தியை அடுத்து சிறு தானியங்களை பயிரிட உள்ளேன் என்றார். தொடர்புக்கு 99652 53329.
- ஏ.ஆர்.குமார், மதுரை

Source : Dinamalar
.

Monday, August 22, 2016

போச்சம்பள்ளியில்இயற்கை முறையில் 20 வகை கீரை சாகுபடிவேளாண் பட்டதாரி அசத்தல்

போச்சம்பள்ளியில் இயற்கை முறையில் 20 வகையான கீரைகளை சாகுபடி செய்து வேளாண் பட்டதாரி வாலிபர் அசத்தி வருகிறார்.
போச்சம்பள்ளி தாலுகா கோணனூரை சேர்ந்தவர் யுவராஜ். வேளாண் பட்டய படிப்பு முடித்துள்ளார். புளியம்பட்டியில் உள்ள முல்லை குழந்தைவேலு என்பவரது நிலத்தில் இயற்கை உரங்களை கொண்டு கீரை வகைகளை சாகுபடி செய்து வருகிறார். இதுகுறித்து யுவராஜ் கூறியது: ‘கீரைகள் உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளது. ஆனால் கீரை சாகுபடியிலும் ரசாயனத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி, அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலை, மணத்தக்காளி, சிறுகீரை என 20 வகையான கீரைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன். வழக்கமான உரங்களை பயன்படுத்தாமல், பழரசங்களை உரமாக இடுகிறேன்.  

ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை சாகுபடி செய்ய, இரண்டு டன் தொழு உரம் போட்டு, மண்ணில் கட்டியில்லாத அளவுக்கு உழவு செய்ய வேண்டும். கீரை சாகுபடியில் தொழுவுரம் மிக அவசியம். அடியுரமாக தொழுவுரம் கொடுத்தால், ரசாயன உரத்துக்கான செலவு மிகவும் குறையும். பத்தடி நீளம், ஆறடி அகலத்தில் பாத்திகள் எடுத்து, நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப வாய்க்கால் அமைத்து கொள்ள வேண்டும். ஓராண்டில் ஒன்பது தடவை முளைக்கீரை, மூன்று தடவை சிறுகீரை, தலா இரண்டு தடவை அரைக்கீரை, மணத்தக்காளி, தலா ஒரு தடவை பசலை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி செய்கிறேன். கீரை சாகுபடியில் நிச்சயம் லாபம் உள்ளது. இயற்கை முறை சாகுபடி என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

Source : Dinakaran

காளான் வளர்ப்புக்குரூ.62,500 மானியம்

காளான் வளர்ப்புக்கு ரூ.62 ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படும், என தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ் வேந்தன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் காளான் வளர்ப்பிற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 2016-17ம் ஆண்டில் ஆர்வம் உள்ள தகுதியான 14 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும். 
பயிற்சியாளர் ஒருவர் இவர்களுக்கென தனியாக நியமிக்கப்படுவார். அவர் விவசாயிகளின் பண்ணைகளுக்கே சென்று காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிப்பார். 
காளான் வளர்ப்பு திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.62 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்திற்கு ரூ.12.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஆர்வம் உள்ள விவசாயிகள் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source : Dinamalar

பந்தல் காய்கறிகளுக்கு 50 சதவீதம் மானியம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், பந்தல் காய்கறி சாகுபடி முறையை ஊக்கப்படுத்தும் வகையில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பந்தல் காய்கறி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவரை, புடலை, பாகற்காய், கோவக்காய், பீர்க்கன் சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பந்தல் காய்கறி சாகுபடியில் ஆர்வத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதே போல் தேனீ வளர்ப்பு திட்டத்தில் 300 தேன் கூடு பெட்டிகள் வழங்கப்படும். தலா ரூ.60 ஆயிரம் மானியத்தில் 15 பவர் டில்லர்கள் வழங்கப்பட உள்ளதாக, தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ் வேந்தன் கூறினார்.

Source : Dinamalar

இயந்திரம் மூலம் நடவுப்பணி எக்டேருக்கு ரூ.5,000 மானியம்

நாகை மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நடவுப்பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுபற்றி நாகை கலெக்டர் பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டத்தில், நெல் மகசூலை அதிகரிக்க நெல் நடவை இயந்திரமயமாக்கல் மூலம் ஊக்கப்படுத்த, தேசிய வேளாண். வளர்ச்சி திட்டத்தில், நெல் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இத்திட்டத்தின்கீழ், 2016-17ம் ஆண்டுக்கு இயந்திரமயமாக்கல் மூலம் நெல் நடவு மேற்கொள்ள எக்ேடருக்கு ரூ.5 ஆயிரம் வீதம், 25 ஆயிரம் எக்ேடரில் மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து வேளாண்மை பொறியியல் துறை மூலமாகவோ, தொடக்க வேளாண். கூட்டுறவு வங்கி மூலமாகவோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ நடவு இயந்திரங்களை பயன்படுத்தி நடவு பணி செய்யலாம். 

இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொள்ளும் விவசாயிகள் நடவுப்பணி செய்த பின் அதற்கான பட்டியல், புகைப்படங்கள், சிட்டா அடங்கல், விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேட்டின் எண், தங்களுடைய வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குனரையோ அணுகி விண்ணப்பத்தை சமர்ப்பித்து நெல் நடவு இயந்திரமயமாக்கலுக்கான பின்னேற்பு மானியம் ஹெக்ேடருக்கு ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்ேடருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் மானியத் தொகையை விரைவாக பெற மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வங்கி கணக்கை தவிர்க்க வேண்டும். 

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நாற்றுகள் தயார் செய்து இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொள்ள நாற்றங்கால் தட்டுகள் 50 சதவீத மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இந்த நர்சரி தட்டுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர்களையோ அணுகி தங்களுக்கு தேவைப்படும் நாற்றங்கால் தட்டுகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளளர்.

Source : Dinakaran

ஆக. 26-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 26-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம்.
இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர், வட்டாரத்தை ஆக. 26-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பிறகு அளிக்க வேண்டும்.

Source : Dinamani

ஏற்காட்டில் காபி விவசாயிகளுக்கு வாரியம் வேண்டுகோள்

சேர்வராயன் மலையில் காபி தோட்டங்களில் காய் துளைப்பானின் தாக்கம் காணப்படுகின்றது. காபி தோட்டங்களில் காபி பருப்பு முற்றாத நிலை ஏற்பட்டுள்ளதால், காய்களின் நுனிப் பகுதியில் காய் துளைப்பான் உள்ளே செல்வதற்கான சூழல் உள்ளது என்று காபி வாரியம் தெரிவித்துள்ளது.
 காபி விவசாயிகள் காபி வாரியம் பரிந்துரைத்த பூச்சி மருந்தை குளோரிபைரியாஸ் 20 ஈ.சி.600 மில்லி லிட்டரை 200 மில்லி லிட்டர் தண்ணீர் மற்றும் 200 மில்லி லிட்டர் ஒட்டும் திரவத்துடன் சேர்த்து முதுகில் சுமக்கும் தெளிப்பானைப் பயன்படுத்தி காய் கொத்துகளின் மீது படுமாறு தெளிக்க வேண்டும். மேலும், காபி காய்த் துளைப்பான் பாதித்த தோட்டங்களில் மட்டும் மருந்து தெளிக்க வேண்டும் எனவும் ஏற்காடு காபி வாரிய ஆராய்ச்சி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். 


Source : Dinamani

மானாவாரி மக்காசோளத்தில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை


பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி மக்காசோளத்தில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் வேளாண் இணை இயக்குநர் பி. சந்திரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை உழவுக்குப் பின் 2 ஆம் உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரமும், களர் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 4 மூட்டை (200 கிலோ) ஜிப்சமும் இட்டு உழ வேண்டும். கடைசி உழவில் அடியுரமாக மண் பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் யூரியா, டி.ஏ.பி அல்லது காம்ப்ளக்ஸ் உரங்களை இட்டு உழ வேண்டும்.
ஏக்கருக்கு 1 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 1 கிலோ பாஸ்போபாக்டீரியாவை 15 கூடை நன்கு மட்கிய தொழுவுரத்துடன் கலந்து, போதியளவு ஈரப்பதத்துடன் நிழலில் 15 முதல் 20 நாள்களுக்கு வைத்திருந்து, விதைத்த 15 அல்லது 20 வது நாளில் வயலில் இட வேண்டும். மானாவாரி மக்காசோளத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியானது பாருக்கு பார் 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ. ஆகும். எனவே, 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். 45 செ.மீ அல்லது 0.45 மீ இடைவெளியில் பார்களும், 30 செ.மீ அல்லது 0.30 மீ இடைவெளியில் செடிகளும் இருக்க வேண்டும்.
1 ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதையளவானது 8 முதல் 10 கிலோ அல்லது 30,000 விதைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு செடியில் உள்ள கதிரில் இருந்து குறைந்தபட்சமாக 100 கிராம் மணிகள் கிடைத்தால் ஏக்கரில் 3 டன் மகசூல் பெறலாம். மேலும், ஒரு கதிரில் சராசரியாக 160 கிராம் மணிகள் கிடைத்தால், ஏக்கருக்கு 4.8 டன் மகசூல் பெறலாம்.
ஒரு ஏக்கரில் 30,000 செடிகள் இருக்குமாறு பயிர்களின் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இதற்கு கயிறு பிடித்து வரிசை நடவு முறையில் நடுவதே சிறந்த வழியாகும். மேலும், விதைகளை நடும்போது 4 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் மேலுரம் இடும்போது ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரத்தையும் தவறாமல் இட வேண்டும்.
ஆக, விவசாயிகள் மானாவாரி மக்காசோளத்தில் தொழுவுரம், மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், ஏக்கருக்கு 30,000 செடிகள், வரிசை நடவு ஆகிய யுத்திகளை கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.

Source : Dinamani

சம்பா பருவத்துக்கான நெல் ரகங்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்: வேளாண் அதிகாரி தகவல்


தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பகுதி பாசன விவசாயிகள் சம்பா பருவத்துக்கான நெல் ரகங்களைப் போதுமான அளவுக்கு வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
 ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசன பகுதிகளில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்களால் பாசன வசதி பெறும் டி.என்.பாளையம், கோபி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டாரங்களில் சம்பா பருவத்துக்கேற்ற நெல் ரகங்களான சிஓ50, சிஓ(ஆர்)48, சிஓ(ஆர்)49, ஏடிடி-38, ஏடிடி-39, ஏடிடி(ஆர்)-49, சிஓ-43 பவானி, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போன்றவைகளும், பின் சம்பா பருவத்துக்கான வெள்ளை பொன்னி ரகங்களான ஏடிடி-38, ஏடிடி-39, ஏடிடி(ஆர்)-46, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நெல் வீரிய ஒட்டு ரகங்களான சிஓ-50, ஏடிடி(ஆர்)-49, சிஓ-50 ஆகியவை உகந்த ரகங்களாக வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளன.
 மேற்கண்ட நெல் ரகங்களில் சிஓ-50, ஏடிடி(ஆர்)-49, ஏடிடி-38, ஏடிடி-39 போன்ற நெல் ரகங்கள் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் பருவத்துக்கு உகந்த விளைச்சல் தரும் என்எல்ஆர்-34449 நெல் ரகமும் இருப்பில் உள்ளது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம், உயிரியல் பூச்சிக்கொல்லிகளான சூடோமோனஸ், ட்ரைகோடெர்மா போன்றவையும் போதுமான அளவு இருப்பு உள்ளது.
 தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடவு செய்ய ஹெக்டேருக்கு மானியமாக ரூ. 5,000 வழங்கப்படுகிறது. அனைத்து நெல் வயல்களிலும் வரப்புப் பயிராக பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, தட்டை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

source : Dinamani

இயற்கை உரத்தில் காய்கறி தோட்டம்: பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அசத்தல்


பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், இயற்கை உரங்கள் மூலமாக, காய்கறிகளை விளைவித்து அதிகாரிகள் அசத்துகின்றனர்.

பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், இரண்டு ஏக்கரில் உரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 15 வார்டுகளில் சேகரமாகும் மக்கும் குப்பை, இங்கு குவிக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. பூங்காவின் ஒரு பகுதியில், ஒரு ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைந்துள்ளது. இதில், இயற்கை உரத்தைக் கொண்டு, வெண்டை, புடலை, வெள்ளரி, சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் மாதுளை ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இத்தோட்டத்து காய்கறிகளை வாங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து, செயல் அலுவலர் சுப்ரமணியம் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உரப்பூங்காவில், இயற்கை உரத்தை பயன்படுத்தி, காய்கறிச் செடிகளை வளர்க்கிறோம். இதனால், மிகுந்த சுவையுடன், உடலுக்கு கூடுதல் ஆரோக்கியம் தரும் காய்கறிகள் கிடைக்கின்றன. மேலும், இயற்கை உரம் தேவைப்படுவோர், அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

Thursday, August 18, 2016

'ஒற்றை நாற்று நடவு முறை சிறந்தது': வேளாண் அதிகாரி ஆலோசனை


''திருந்திய நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நடவு முறையானது, நெல் சாகுபடியில், 30 சதவீத கூடுதல் மகசூலை வழங்குகிறது,'' என, டி.என்.பாளையம் வேளாண் உதவி இயக்குனர் சிதம்பரம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: இந்த முறையில், ஏக்கருக்கு, இரண்டு கிலோ விதை நெல் போதுமானது. ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். இந்த சாகுபடி முறையால், 40 முதல், 50 சதவீதம் வரை, நீரை சேமிக்கலாம். பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறையும். போதுமான இடைவெளி இருப்பதால், எலிகளால் ஏற்படும் சேதம் தவிர்க்கப்படும். விதை, இடுபொருட்களின் செலவு மற்றும் அளவும் குறைகிறது. உற்பத்தி செலவு குறைவதுடன், மகசூல் அதிகரிப்பதால், கூடுதல் வருவாய் கிடைக்கும். அனைத்து பருவங்களுக்கும், அனைத்து நெல் ரகங்களுக்கும் இம்முறை ஏற்றதாகும். இவ்வாண்டில், டி.என்.பாளையம் வட்டாரத்துக்கு இயந்திர நடவுக்காக, 230 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Source : Dinamalar

வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதல்


t

வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். பயிரின் இளம் பருவத்தில் நிலவும் வெப்பமான கால நிலையினால், வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. 
இலைப்பேன் தாக்குதலால் வெங்காய பயிரில் இலை முழுவதும் வெண் திட்டுக்கள் காணப்படும். கடுமையாக தாக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து காயத் தொடங்கும். இலைகள் பசுமை நிறம் குன்றி வெண்மை நிறமடைவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு பயிர் வளர்ச்சி குன்றும். 
இலைகளை ஒரு வெண்ணிற அட்டையின் மீது தட்டினால் சிறிய மெலிந்த வெளிர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற இலைப்பேன்கள் நகர்வதை எளிதில் கண்டு கொள்ளலாம். இளங்குருத்துகளில் முட்டை இடும்.
வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் தீவிரமடைந்து காணப்பட்டால் 'டைமீதோபேட்' மருந்து எனில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதமும், 'புரோபினோபாஸ்' மருந்து எனில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி வீதமும் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். 
மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக 'சாண்டோவிட்' 'இண்ட்ரான்' 'பைட்டோவிட்' 'அக்ரோவிட்' போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது நோய் தாக்குதலில் இருந்து வெங்காய பயிர்களை காக்க முடியும்.


Source : Dinamalar

நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை


t

வேரழுகல் நோயானது 'மேக்ரோபோமினா பேசியோலினா' என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன.
இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: கோடையில் ஆழமாக உழுதல் வேண்டும். பயிர் சுழற்சி முறையை கடைப்படிக்க வேண்டும். தொழுஉரம் 12.5 டன் / எக்ேடர் இட வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். 
தரமான விதைகளை 'டிரைக்கோடெர்மா விரிடி' 4 கிராம் / கிலோ அல்லது 'சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்' 10 கிராம் / கிலோ அல்லது 'கார்பன்டசிம்' அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும். விதைத்த 20 - 30 நாட்களுக்குள் 'சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்' / 'டிரைக்கோடேர்மா விரிடி' 2.5 / கிலோ / எக்டேர் என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு உரம் கலந்து இட வேண்டும். வேரழுகல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் 'கார்பன்டசிம்' மருந்தை கலந்து நோய் தாக்கிய செடிக்கும் அதை சுற்றியுள்ள செடிகளுக்கும் வேர்ப்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்ற வேண்டும்.
பேராசிரியர் ம.குணசேகரன்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூ
ர்

Source : Dinamalar

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி - சாதிக்கிறார் விவசாயி வெங்கடேஷ்


t

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்து 'சாதித்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி வெங்கடேஷ். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவை சேர்ந்த இவர் டிப்ளமோ பட்டம் பெற்று தனியார் துறையில் பணியாற்றி வந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் விவசாயத்தில் நாட்டம் கொண்டார். 
விளைவு கோட்டைப்பட்டியில் 10 ஏக்கரில் சம்பங்கி, மல்பரி, தென்னை, வெள்ளரி பயிரிட்டுள்ளார். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி, பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்.

நவீன தொழில்நுட்பம்: இரும்பு குழாய்களை கொண்டு குடில் அமைத்து, அதனை அல்ட்ரா வயலெட் பாலிதீன் ஷீட்களை கொண்டு மேற்கூரை அமைத்து அதனுள் பயிர்களை வளர்த்திட தேவையான சீதோஷ்ண நிலைகளை உருவாக்கி பயிர்களை அதிகபட்ச வெப்பம், குளிர், காற்று, பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து காத்து மகசூல் எடுப்பதே பசுமைக்குடில் தொழில் நுட்பமாகும். திறந்தவெளி சாகுபடியை விட 10 முதல் 12 மடங்கு அதிக மகசூலை பெறலாம். பருவம் இல்லாத காலங்களிலும் சாகுபடி செய்து மகசூல் பெறலாம். தண்ணீர் தேவை மிக குறைவு. தரமான, நோய் தாக்காத காய்கறிகள், மலர்களை 
சாகுபடி செய்ய முடியும்.

விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது: விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் பசுமைக்குடில் சாகுபடிக்கு, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.935 வீதம் குறைந்தபட்சம் ஆயிரம் முதல் அதிகபட்சம் 4 ஆயிரம் சதுர மீட்டருக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மானியமாக விவசாயிகளுக்கு வங்கி கணக்கின் மூலம் வழங்கபடுகிறது. பசுமைக்குடிலில் கடந்த ஏப்ரலில் வெள்ளரி பயிரிட்டேன். தோட்டக் கலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனை படி சொட்டுநீர் 
பாசனத்தின் மூலம், அனைத்து தொழில்நுட்பங்களையும் கடை பிடித்து வருகிறேன்.
வெள்ளரி பயிர் 20வது நாளில் பூக்க ஆரம்பித்து 37வது நாள் முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற முறையில் அறுவடை செய்து வருகிறேன். 
75 நாட்களில் 22 மெட்ரிக் டன் வரை மகசூல் எடுத்து, சென்னை, கோவை, ஒட்டன்சத்திரத்துக்கு அனுப்புகிறேன். இன்னும் 15 டன் மகசூலை எதிர்பார்க்கிறேன். 
பசுமைக்குடில் அமைக்க ரூ.23 லட்சம் வரை செலவழித்து, ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் தோட்டக்கலைத்துறை மானியம் பெற்றுள்ளேன். ஒரே ஆண்டில் 3 பயிர்கள் மூலம் எனது முதலீடு திரும்ப கிடைக்கும் நம்பிக்கை எனக்குள்ளது என்றார். 
தொடர்புக்கு 98945 83379.
என்.பாலமுருகன், விருதுநக
ர்

Source : Dinamalar

தென்னை நாற்றங்கால் சாகுபடி - கூடுதல் லாபம் பெறும் விவசாயி


t

''தேங்காய் விலையில் ஏற்றம், இறக்கம் உண்டு. எனினும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு என்றும் அட்சய 
பாத்திரமாக விளங்குவது தென்னை தான்,'' என்கிறார் சோழவந்தான் தென்னை விவசாயி முருகேசன், 55. இவருடைய பாரம்பரிய தொழிலே தென்னை தான். 
50 ஏக்கரில் தென்னை மரம் வளர்த்து பராமரித்து வருகிறார். 
அத்துடன் ஒரு ஏக்கரில் நாற்றங்கால் பண்ணை அமைத்து, அதில் நாட்டு தேங்காய் நாற்றுகள், ஜாதி நாற்றுகள் வளர்த்து வருகிறார். 
இந்தவகை நாற்றினை நிலத்தில் நட்டு பயிரிட்டால் நான்கு ஆண்டுகளில் பலனுக்கு வந்துவிடும் ரகத்தை சேர்ந்தது. நவீனதொழில் நுட்பம் குறித்து விவசாயி முருகேசன் கூறியதாவது: இயற்கை உரத்தினை பயன்படுத்தி நாற்றுகளை வளர்க்கிறேன்.எங்களது தோப்பில் 50 ஆண்டு வயதுடைய தென்னை மரத்தில் பறிக்கப்பட்ட தேங்காயை தட்டி பார்த்து தேர்ந்தெடுப்போம். பின்னர் பசுமைகுடில் அமைத்த ஆற்றுமணல் திடலில் தோண்டிய குழியில், மக்கிய இலைதழை குப்பைகளை நசுக்கி அடியுரமாக வைத்து பதம்பார்த்த தேங்காய் விதையை பதித்து, தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆடு, மாட்டு சாணத்தை நன்றாக வெயிலில் உலர வைத்து பின் அதனை தண்ணீரில் கலந்து ஒவ்வொரு நாற்று கன்றுக்கும் இடவேண்டும்.
தினமும் காலையில் தண்ணீர் தெளித்து கன்றின் வளர்ச்சி குறித்து பராமரிக்க வேண்டும். ஆறு மாதத்தில் இளங்கன்று நாற்றில் குருத்து முளைத்து பூமியில் இருந்து பாளை வெளிப்படும். இயற்கை உரமிடுதலால் பூச்சி, நோய் தாக்காது. கோல்கட்டாவில் தயா ரான அடியுர ஊட்டச் சத்தாக 'மைக்ரோ ஆர்கானிக் டானிக்' ஒரு லிட்டரில் 6 லிட்டர் தண்ணீர் கலந்து 20 கன்றுகளுக்கு அடிபகுதியில் இடவேண்டும். இந்த வகை நாற்றுகளை பயிரிட்டதில் நான்கு ஆண்டுகளில் ஒரு மரத்தில் 60 காய்களுக்கு மேல் காய்க்கிறது. 
இதன் மூலம் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும். இந்த நவீனதொழில் நுட்பத்திற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். தோட்டக்கலைத்துறை, அரசின் மானியம் பெறாமல் பண்ணை அமைத்து நவீன தொழில் நுட்பத்தில் தென்னை விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார். தொடர்புக்கு 98653 61133.
- எம்.சின்ராஜா, சோழவந்தான்
.

Source : Dinamani

சொட்டுநீர் பாசனத்துக்கு 100 % மானியம்


மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய 100 % மானியம் வழங்கப்படுவதாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டிற்கான (2016 - 17) வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளின் பயிர் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மையை அதிகரிக்க, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கு 4,061 ஏக்கருக்கு, ரூ. 27.98 கோடியும், வேளாண் துறைக்கு 1,359 ஏக்கருக்கு ரூ. 9.32 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக நுண்ணீர் பாசனத்தின் மூலம் விவசாய பாசன நீர் தேவையினை, 4 பங்கிலிருந்து, ஒரு பங்கு அளவாக குறைக்க முடியும்.
மேலும், தேவையான இடத்தில் மட்டும் நீர் பாய்ச்சப்படுவதால் பயிருக்கு முழுமையான நீர் கிடைப்பதோடு, நீரில் கரையும் உரங்களையும் பயிரின் வேர்களுக்கே சீராக கொடுக்க முடியும் என்பதால், உரத் தேவையும் குறையும். அதிக லாபமும் பெறலாம்.
இத்திட்டங்கள் குறித்து, விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக்கலை மற்றும் வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு (2.5 ஏக்கர் வரை) 100 % மானியமும், இதர விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்கு மேல்) 75 % மானியமும் வழங்கப்படும்.
சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை அறிக்கை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி, பயன்பெறுமாறு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பொ.மணிமொழி தெரிவித்துள்ளார்.
 Source : Dinamani

நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ. 5,000 மானியம் பெறலாம்: வேளாண் துறை அறிவிப்பு


நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ. 5,000 மானியம் பெறலாம் என்று வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பாசனத்தில் டி.என்.பாளையம், கோபி, ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி வட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்ய நெல் விதைகள் போதுமான அளவு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பருவத்துக்கு உகந்த அதிக மகசூல் தரும் என்எல்ஆர் 34449 என்ற நெல் ரக விதைகளும் இருப்பில் உள்ளது. மேலும், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம், உயிரியியல் பூஞ்சை கொல்லிகளான சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா போன்றவைகளும் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இயந்திர நடவு மேற்கொள்ள மேம்படுத்தப்பட்ட ஓர் ஹெக்டேருக்கு மானியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அனைத்து நெல் வயல்களிலும் வரப்பு பயிராக பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, தட்டை போன்றவற்றை சாகுபடி செய்யலாம். இதற்காக விவசாயிகளுக்கு அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

"தரிசு நிலங்களில் வேப்பமர கன்றுகள் நடவுக்கு ரூ.17 ஆயிரம் மானியம்'



தரிசு நிலங்களில் வேப்பமரக் கன்றுகள் நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட வேளாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தரிசு நிலங்களில் வளர்க்கக்கூடிய மரங்களில் வேப்பமரம் முக்கியத்துவம் வாய்ந்தது. வறட்சியைத் தாங்கி நன்கு வளரக்கூடிய தன்மை உள்ளது. ஆண்டு முழுவதும் பசுமையாகவும்,  குளிர்ச்சி தரும் மரமாகவும் உள்ளது. காற்று மண்டலத்தில் உள்ள நச்சுக்காற்றை உறிஞ்சுவதால் சுற்றுப்புறம் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வகை மண்ணிலும் வரும் தன்மையுடையது.
நடவு முறை: நான்கு முதல் 5 வயதுடைய வேப்பமரக் கன்றுகள் நடவு செய்ய ஏற்றது. 5-க்கு 5 மீட்டர் இடைவெளியில் 1-க்கு 1 மீ. என்ற அளவு குழியில் மண்புழு உரம், வேர் வளர்ச்சி பூசணம், உயிர் உரங்கள் கலந்து கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேர் பரப்புக்கு 400 கன்றுகள் தேவை. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் பருவமழை காலங்களில் நடவு செய்வது அவசியம். மழைக் காலம் முடிந்த பிறகு டிசம்பர், ஜனவரி மாதங்களில் செடிகளைச் சுற்றி களை நீக்க வேண்டும். மண்ணைக் கொத்துவதன் மூலம் வளர்ச்சி ஊக்கப்படும்.
மகசூல்: வேப்பமரம் நட்ட 5 முதல் 6 ஆண்டுகளில் பூக்கள் பூத்து காய்க்கத் தொடங்கும். 8 ஆண்டு மரத்தில் இருந்து 5 கிலோ விதையும், 10 ஆண்டு மரத்தில் இருந்து 10 கிலோ விதையும் கிடைக்கும். நல்ல சுத்தம் செய்யப்பட்ட வேப்பங்கொட்டை விதை கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஊடுபயிர் செய்து உபரி வருமானமும் ஈட்டலாம்.
அரசு மானியம்: தரிசு நிலங்களில் வேப்பங்கன்றுகள் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளை நடவு செய்த பிறகே மானியம் வழங்கப்படும். மேலும், ஊடு பயிர் செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. ஆயிரம், பராமரிப்புச் செலவுக்கு ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இரண்டாவது ஆண்டும் ஊடுபயிர் செய்ய ரூ.1000, பராமரிப்புக்கு ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். 3ஆம் ஆண்டில் ஊடுபயிருக்கு மட்டும் ரூ.1000 மானியமாக வழங்கப்படும். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : Dinamani

An app that takes mechanisation to farmers

AK Surya Power Magic, a Coimbatore-based technology start-up that focuses on the farming sector, has launched “Gold Farm”, a mobile application that helps farmers get farming equipment on rental basis.
Karthic Ravindranath, director and co-founder of Gold Farm, and Abhilash Thirupathy, its director and co-founder, told The Hindu that the company had helped more than 500 farmers install solar powered pump sets for agriculture activities.
About a year ago, it launched a single platform that helps farmers connect with the equipment providers. It has worked with farmers in Karnataka and will focus on that area for the next six months. “Currently, we have 15 equipment providers. We will aggregate additional 65 tractors and 50 farm equipment,” said Mr. Ravindranath.
The machinery has been made available throughout the year at competitive prices. The company uses a fully-integrated Internet of Things (IOT) based technology to enable the hiring services. It helps the service providers as there is a demand for the equipment throughout the year. It benefits the farmers as it helps them mechanise farming activities at affordable prices and reduce wastage. This is available to all farmers, irrespective of the extent of area under farming, and they can use the application even without internet connectivity, said Mr. Thirupathy.
Farmers need to download the app, which is available in the local language of the State and book the tractor and implement on their own or call 78877 78877 or through facilities provided at a nearby post office. The company has tied up with the Postal Department for this purpose.
“So far, we have reached around 15,000 acres of tractor service across four States. In the next five years, we expect another five million farmers to be serviced,” said a press release from the company, which has so far received half a million dollars investment from Infuse Ventures.

Source: The Hindu 

Area under medicinal crop cultivation increases in Attur

 
The coleus forskohlii.
The coleus forskohlii.
The area under medicinal ‘coleus’ (botanical name: ‘coleus forskohlii’ and in Tamil ‘Marunthu Koorkan) cultivation has increased in Attur region this season, thanks to favourable market conditions.
The ‘coleus’ is cultivated on about 700 hectares in Salem district. Attur, Thalaivasal and Kallakurichi are the major coleus production centres in the district.
“Forskohlin”, an alkaloid in roots, is used in the treatment of blood pressure and ‘Glaucoma’ eye ailment and also all kinds of nervous disorders. Coleus has anti-histamine and anti-asthma health benefit. It promotes weight loss in obese patients. Harvested tubers are cut into small pieces and dried under shade until it reaches eight per cent moisture level.
In Tamil Nadu, Salem, Tiruvannamalai, Villuppuram districts are the major medicinal coleus production centres. In Attur region, contract farming of coleus gained popularity among small and marginal farmers. It is easy to grow and a profitable crop for the farmers.
According to M. Selvapriya, agriculture consultant, this crop is raised during the months of June to October and well drained red loamy soil is suited for cultivation. Crop duration is six to seven months. The crop yields 15 to 20 tonnes per hectare fresh tubers and 2,000-2,000 tonnes per hectare dry tubers.

Source: The Hindu 

MPEDA, CIFA reach out to aqua farmers


The Marine Products Export Development Authority (MPEDA), the Indian Council of Agricultural Research (ICAR)-Central Institute of Freshwater Aquaculture (CIFA) and the Fisheries Department arranged stalls at Pavitra Sangamam Ghat in the city on Tuesday.
With the slogan ‘Blue Revolution and Blue Economy,’ the MPEDA authorities arranged a one-day stall and explained the farmers on seafood export potential and the demand for aquaria fish in the international market.
The CIFA officials arranged stalls with the photographs of freshwater fish at the ghat at Ibrahimpatnam. Scientists of the Fisheries Research Station of Sri Venkateswara Veterinary University (SVU), Undi, in West Godavari district arranged a stall with diseases in different fish species.
The Fisheries Department arranged a stall and explained the farmers on the schemes introduced by the government for aqua farmers.
“We explained the farmers on the schemes introduced by Government of India for the benefit of aqua farmers. The MPEDA has arranged a display of fish in the stall and the response was good,” said MPEDA Deputy Director S. Kandan.
National Centre for Sustainable Aquaculture Chief Executive Officer (CEO) K. Shanmukha Rao of Kakinada gave a demo on sustainable aquaculture to the shrimp farmers.
AP Dairy Development Corporation displayed the milk, sweets, flavoured milk and other varieties being prepared by the corporation.
Principal Scientist and Head of Fisheries Research Station of Undi, Suguna Tummala said that farmers should have knowledge on the diseases in fish and prevent production losses.
“Many farmers are suffering huge losses due to lack of knowledge on diseases in fish varieties. The government is arranging training for farmers on disease eradication in aquaculture,” Prof. Suguna said.

Source : The Hindu 

Cheer for farmers as banana prices rule steady

 
Banana farmers, who survived an unusually hot summer early this year, are reaping the rewards of their perseverance with the price of raw nendran banana ruling steady around Rs.60 a kg.
Government-owned vegetable procuring agency Horticorp bought nendran on Tuesday at Rs.60 a kg while the retail price had gone up to about Rs.75 a kg depending on the location and availability, sources said.
The price on the website of Vegetable and Fruit Promotion Council Keralam (VFPCK), which tracks vegetable prices, was Rs.65 in the Ernakulam retail market on Tuesday for the local variety of bananas. The wholesale price was Rs.60 a kg. Banana sourced from outside the State was selling for Rs.60 a kg in the retail market.
V.P. Kuriakose, a farmer, said that farmers had been receiving remunerative prices for over a month now. The auction at the Maradu wholesale vegetable market a fortnight ago saw farmers receiving up to Rs.70 a kg.
The farmers fetched up to Rs.65 a kg in the last auction on Thursday.
The rise in the price of bananas has been attributed to the serious crop losses sustained during the hot months of April and May. Besides, market sources said, the arrival of banana from Mettupalayam market had not picked up momentum.
Meanwhile, the price of other vegetables has continued to rule steady. The more pricey items included carrots and ginger. The price of carrot was Rs.50 a kg in the Ernakulam retail market, according to VFPCK. Ginger was being sold for Rs.60 a kg in the retail market.

Source: The Hindu 

Cotton conference on Aug. 19, 20


The Indian cotton sector needs a comprehensive study on challenges, requirements, and scope to increase production.
President of Indian Cotton Federation J. Thulasidharan told reporters here on Tuesday that action can be taken to increase productivity, control price volatility, ensure attractive prices to farmers, and streamline exports and imports only when all the stakeholders are consulted and a comprehensive study of the sector is done.
Vice-president of the association P. Nataraj added that the Central Government should come out with an export policy for cotton. In the current season, Pakistan had been a major importer of Indian cotton. Over 60 lakh bales were exported so far to different countries this year. Based on the estimates of the Cotton Advisory Board, the Government should take decisions on exports, he said.
The Indian Cotton Federation will organise a two-day conference here on “Indian Cotton Scenario in the Current Context 2016-2017” on August 19 and 20.
About 400 people, including cotton ginners, traders, textile industry representatives, and brokers are expected to take part. They will deliberate on cotton area, demand, supply and price situations, and sustainable management practices.
The two-day programme will have panel discussions for ginners, brokers, and spinners. Talks will be on cotton textile eco-system, global scenario, hedging, arbitration, challenges in cotton production, modern trends in spinning, and funding cotton purchase. The association members plan to submit their suggestions to the Union Textile Minister after the meeting.

Source: The Hindu 

Cotton yield is expected to rise this season

Even as the area under cotton has come down this kharif season, the production in the key cotton growing States could still be higher during the 2016-17 marketing season than in 2015-16.
This is because of better yields expected in good weather, officials told The Hindu .
In North India, Haryana, Punjab and Rajasthan are the major cotton-producing States. After the genetically modified cotton crop suffered a huge damage last year in Punjab and Haryana from the whitefly pest attack, farmers have cut down on area under cotton this season.
Sowing area
According to the India Cotton Association Limited (ICAL), cotton has been sown on 2.56 lakh hectares in Punjab and on 4.96 lakh hectares in Haryana.
In Rajasthan, the crop has been planted on five lakh hectares.
“No doubt, cotton area has dipped this year. But conducive weather conditions this season will increase the yield; hence, the production during the 2016-17 season in the northern States is likely to be higher than that in 2015-16,” said ICAL president Rakesh Rathi.

Source: The Hindu 

BANGALORE - 08.09.2013 : Arka Rakshak, an high-yielding and disease-resistant variety of tomato, brought out by the IIHR, in Bangalore. Photo: B S Satish Kumar
Bengaluru’s very own high-yielding tomato varieties of Arka Rakshak and Arka Samrat have helped their researchers bag a prestigious national award.
A team of horticultural scientists from the Hessarghatta-based Indian Institute of Horticultural Research (IIHR) who had developed these varieties after a five-year research has been honoured with the Indian Council of Agricultural Research’s award for “Outstanding Interdisciplinary Team Research in Agriculture and Allied Sciences.”
These varieties represent the city even in their names as ‘Arka’ stands for the Arkavati river on whose bank IIHR is located.
According to Dr. A.T. Sadashiva, one of the main criteria for the award was the social and economic impact the research work had on society. These tomato varieties are not only high-yielding, but also show high resistance to three major diseases.
This reduces the cost of cultivation by 10 to 15 per cent in terms of savings towards the cost of fungicides and pesticides, he noted.
The fruits of these varieties are suitable for long-distance transportation as they are firm and have a shelf life of 15 to 20 days as against 10 to 12 days of other hybrids, and six to eight days of ordinary tomato varieties, Dr. Sadashiva added.
Arka Rakshak, which gives a yield of up to 19 kg a plant, is already sought after by farmers and traders in eight countries.
The award for the year 2013-14 was presented recently at a programme held in New Delhi to the nine-member team led by Dr. Sadashiva, principal scientist and Head of the Division of Vegetable Crops, IIHR.
The other members of the team are Dr. Peter Hanson, Dr. M. Krishna Reddy, Dr. Girija Ganeshan, Dr. C. Gopalakrishnan, Dr. K. Madhavi Reddy, Dr. S. Shankara Hebbar, Dr. T.H. Singh and Dr. K.V. Ravishankar.


Source: The Hindu 

Many incentives for paddy farming


“Kollavarsham (Malayalam calendar) 1192 will be observed as Year of Paddy,” Minister for Agriculture V.S. Sunil Kumar has said.
Addressing a Farmers Day function here on Wednesday, he said an additional amount of Rs. 60 crore would be allotted for paddy development this year.
“Steps will be taken to increase the area of paddy cultivation to three lakh hectares. A seed bank will be formed to protect indigenous seeds. The government will also promote cultivation of millets and pulses,” Mr. Sunil Kumar said.
The Minister said the support price for paddy would be ensured for farmers in the State.
Action would be taken for timely remuneration for rice procured from farmers. Steps would be taken to make land lying follow arable again with the support of Agriculture and Cooperative departments.
“Interest-free loans will be allotted to vegetable farmers. Around 3,500 farm-fresh vegetable outlets will be opened for Onam season. The Kerala Agriculture University has been asked to develop poly houses according to the demand of farmers,” he said.

Source : The Hindu 

Students get farm tips on Farmer Day


Students attend an orientation programme in farming at Kerala Agricultural University, Mannuthy, on Wednesday.
 
Students attend an orientation programme in farming at Kerala Agricultural University, Mannuthy, on Wednesday.
Kerala Agricultural University (KAU) celebrated this year’s Farmers Day with a different set of stakeholders. Those who attended the orientation and training in agricultural practices on Wednesday were students from different schools, and the trainers included farm scientists and farmers.
The orientation began with an interaction with KAU Vice Chancellor P. Rajendran, who inaugurated the event. The Vice Chancellor, explaining the nuances of plant science and food chain in simplest terms, recalled his student days when they were close with nature and used to involve in farming.
Food security
Director of Extension S. Estelita, in her presidential address, said that youngsters had wooed to farming and farm science so as to ensure food and nutritional security to future generations.
The schoolchildren were imparted lessons in pulses cultivation, preparation of delicacies with pulse varieties and hands on training in grafting.

Source : The Hindu 

Sale of vegetable, fruit seedlings by KVK


The ICAR-Krishi Vigyan Kendra (Ernakulam) is conducting a seedling sales mela on the premises of CMFRI near the Goshree Road, High Court of Kerala Junction on Thursday and Friday, said a press release here.
The sale will be from 10 a.m. to 3 p.m. The programme is conducted as part of the KVK’s Self Farming for Safe Food programme. Ready-to-plant vegetable seedlings (tomato, brinjal, chilly, okra, cowpea) and fruit seedlings/grafts (mango, jack, jamba, rambutan, cherry, guava, sapota, sitaphal) are being sold. Vegetable seedlings are priced Rs. 2 apiece and fruit seedlings/graft price ranges between Rs. 30 and Rs. 350.

Source : The Hindu 

Government to set up international seed bank: Agriculture minister

Representative Image. 
 

Thrissur: Agriculture minister V S Sunilkumar said that the LDF government would set up an international level seed bank in the state to conserve the fast extincting varieties of paddy seeds.

Inaugurating the farmers' day observance programme organized by the corporation and agriculture department, the minister said that the government would observe this year as the 'paddy year' with an aim to promote paddy cultivation across the state."Arrangements to disburse the paddy procurement prices to paddy farmers without any delay will be done in the future with the help of cooperative banks," said the minister adding that interest free loans would be provided for vegetable cultivation.

"As many as 3,500 Horticorp outlets will be started across the state to promote the produces of local farmers. Irrigation mapping to identify the existing ponds, canals, water streams etc, has been carried out by the irrigation department to conserve the wet lands and water resources," said Sunilkumar.

The minister also said that the best farmer from scheduled tribes section would also be given a special agriculture award starting next year.


Source : Times of India 

Deficient monsoon may force farmers to go for pulses, millets


COIMBATORE: Pulse and millet production in the district may increase next year, if the North-East monsoon also fails like the South-West monsoon. The district has received only 36% of the rainfall expected during the SW monsoon, forcing farmers to start considering short-term rainfed crops if the NE monsoon also fails. However, the situation might be advantageous, considering the skyrocketing pulse prices.

The district has received only 58mm of rain, against the expected 160mm since June. Though September is when a majority of the rainfall is from the SW monsoon, hopes of reaching the expected rainfall are low.

"We had expected the rainfall to fall short by about 19% compared to the 210mm received last year, but this deficit is more than expected," admitted the director of the Agro Climate Research Station at Tamil Nadu Agricultural University, Dr S Paneerselvam.

With ground water levels and borewells touching an alarming low level, farmers cultivating traditional crops like paddy, banana and sugarcane have now begun looking for other options. "Usually, when the rainfall is poor, the NE monsoon has not been much better," said an organic farmer based in Arasur, G Ramasamy.

"So if that is also deficit, all our banana plantations will dry up by next May. Many of us have seriously been thinking about switching to maize or pulses, considering the good prices we are likely to get," he said.

Though pulses are cultivated across 12,000 hectares in the district, a majority of farmers new to the crop hesitate to try it because of a relatively low yield. Pulses traditionally give between 1 to 1.25 tonnes per hectare. However, sky rocketing prices of the crop is making many paddy, sugarcane and banana farmers to consider switching.

While tur dal is retailing for 130 per kg, whole sale cost of gram dal is 150 per kg. The high prices are because of the drought and low yield across the 2 lakh hectars of pulses cultivated in Karnataka over the past two years.

However, with many farmers in Maharashtra now beginning to get into or increase their pulse cultivation, Coimbatore farmers are closely following the trend. "If we get a good price like 70 to 90 per kg, we will make good profit. Besides, they are usually 120 day crops which don't require that much water," said K Marappan, another farmer in Arasur.

Source: Times of India