Wednesday, December 20, 2017

நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்!


hen
திருநெல்வேலி: மிகக் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு முறை சிறந்தது.
கிராமப் புறங்களில் வீட்டுக்குவீடு நாட்டுக் கோழி வளர்ப்பர். அதையே, கூடுதல் அக்கறையுடன் கோழிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் மிகுந்த லாபம் பெறலாம். இன்றைய சூழலில் நாட்டுக்கோழிக்கு நல்ல விலை கிடைக்கிறது. 450 சதுர அடி இருந்தால் போதும். 10 கோழிகளை வளர்த்து மாதம் ரூ. 2,500 வரை வருமானம் ஈட்டலாம்.
ஒரு பெட்டைக்கோழி ஆண்டுக்கு 3 பருவங்களில் முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 15 முட்டைவரை இடும். முட்டை இடுவதை தேதி வாரியாக எழுதிவைத்து, கடைசியாக இட்ட 9 முட்டைகளை அடைகாக்க வைப்பது லாபகரம். நல்ல வளர்ச்சி பெற்ற ஒரு பெட்டைக் கோழியால் 9 முட்டைகளை மட்டுமே அடைகாக்க முடியும். 
அடுப்புச் சாம்பல், மணல் ஆகியவற்றைக் கலந்து கூடையில் நிரப்பி, ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பை ஏற்படுத்த கரித்துண்டும், இடியைத் தாங்க இரும்புத் துண்டும் போட்டுவைக்க வேண்டும். இந்தக் கூடையில் கோழியை அடைகாக்கச் செய்வதன் மூலம் 9 முட்டைகளும் பொரியும் வாய்ப்புள்ளது.
குஞ்சுகள் பொரிந்ததும் அவற்றுக்கு முதல் வாரம், தினமும் மஞ்சள்தூள் கலந்து கொடுக்க தண்ணீர் வேண்டும். பின்னர், 3 வாரங்களுக்கு ஏதேனும் வைட்டமின் டானிக் மருந்தை சில சொட்டு கலந்து கொடுக்கலாம்.
வாரம் ஒருமுறை அரசு கால்நடை மருந்தகங்களில் கோழிக்கு தடுப்பு ஊசி போடவேண்டும். இதைத் தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம் கோழிகளைப் பாதுகாப்பாக வளர்க்கலாம். 
கோழி வளர்க்கும் இடத்தைச் சுற்றி 4 அடி உயரத்துக்கு வலையால் வேலி போட வேண்டும். வேலியோரம் கீழ் மண்ணைக் குவித்து வைத்து சிமென்ட் பால் ஊற்றினால் பிற உயிரினங்களால் கோழிகளுக்கு தொல்லை ஏற்படாது.
வலை போட்டுள்ள பகுதியில் 3 அடிக்கு 3 அடி என்ற அளவில் சதுரமாக 3 அடி உயரத்தில் 3 குடிசை போட வேண்டும். நாட்டுக் கோழி குப்பையில் புரண்டு இறக்கையை உதறும். இதன்மூலம் உடம்பிலிருக்கும் 'செல்' போன்ற சின்னச் சின்ன உயிரினங்கள் வெளியேறும்.
பண்ணையில் குப்பைக்குழிக்கு வாய்ப்பில்லை. எனவே, தரையில் சாம்பல், மணலைக் கலந்து வைக்க வேண்டும். தீவனத் தொட்டி, தண்ணீர்க் குவளை போன்றவற்றையும் வைக்க வேண்டும். கோழிகளை சுதந்திரமாகத் திரிய விட வேண்டும்.
10 கோழிகளுக்கு ஒரு சேவல் என வளர்க்க வேண்டும். சில கோழிகள் அடிக்கடி பறந்து வெளியே செல்லும். அவற்றுக்கு மட்டும் ஒரு பக்க இறக்கையை 4 விரல் அளவுக்கு வெட்டினால்போதும். அவை பறக்காது. 
10 கோழிகளை வளர்ப்பது ஒரு யூனிட். அவ்வாறு பல யூனிட்களை உருவாக்கலாம். குஞ்சுகள் தாயிடமிருந்து பிரிந்ததும், அவற்றைக் கொண்டு யூனிட் அமைப்பது நல்லது.
கோழிகளின் உணவுக்காக கரையான் உற்பத்தி செய்து கொடுக்கலாம். அடுப்புக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலை - தழைகள், வீணாகும் தானியங்கள் கொடுத்தால் போதும். 5 மாதங்களில் ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்துவிடும். நாட்டுக்கோழி விற்பதில் சிரமமில்லை. நாம் விற்பது தெரிந்தால் வியாபாரிகள் வீடுதேடிவந்து வாங்கிச் செல்வர்.
Source : Dinamani 

Monday, December 18, 2017

TNAU scientists develop mobile app for farmers




Screenshot of the App-based expert system for farmers developed by TNAU scientists.  

Five agriculture scientists attached to the e-Extension Centre of the Tamil Nadu Agriculture University have developed an exclusive mobile app for farmers.
The team was led by C. Karthikeyan, Professor of Agri e-Extension Centre, and the National Agriculture Development Project has funded Rs. 20 lakh for this project.
The mobile app is an extension of the web-based solution provided to the farmers. Earlier, farmers could access the information on web through the desktop or laptop computers. Now, they can access information related to five crops and animal husbandry enterprises on their mobile phones.
The app provides information on five crops namely paddy, sugarcane, banana, coconut and ragi. The materials are available in Tamil and English.
The app can be downloaded from google app store or from the website of the National Mobile Governance Initiative of the union government. Farmers have to follow the app step by step to identify the disease or the pest comparing the visuals or the video clippings provided for the purpose and the remedy for the same instantly.
Mr. Karthikeyan claimed that this initiative was the first in the entire nation.
For details visit: http://agritech.tnau.ac.in/expert_ system.html
Source : The Hindu 

Monday, December 11, 2017

பயிர்களின் நோயை கண்டறிய உதவும், 'செயலி' கோவை வேளாண் பல்கலை அறிமுகம்

கோவை:விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, 'வேளாண் வல்லுனர் அமைப்பு' என்ற மொபைல் போன் செயலியை தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் வேளாண் பயிர்கள், கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்த முழுத் தகவல்களை விவசாயிகள் தங்களின் மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வேளாண் பல்கலை இ - விரிவாக்க மைய விஞ்ஞானிகள், இந்த செயலிகளை உருவாக்கியுள்ளனர்.
இத்திட்டத்தின் முதன்மை வேளாண் விஞ்ஞானிகார்த்திகேயன் கூறியதாவது:
'வேளாண் வல்லுனர் அமைப்பு'என்ற இணையப் பக்கத்தை வேளாண் பல்கலை இணையதளத்தில் துவக்கியுள்ளோம். தற்போது அதற்கான மொபைல் போன் செயலியையும் அறிமுகம் செய்துள்ளோம்.
வேளாண் பயிர்களை, பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குகின்றன. அது என்ன வகையான நோய், எதனால் வருகிறது என்பது குறித்து, அனைத்து விவசாயிகளாலும் அறிந்து கொள்ள முடிவதில்லை.
வேளாண் ஆய்வகத்துக்கு, பாதிப்படைந்த பயிரைக் கொண்டு வந்து சோதனை செய்த பிறகுதான்பாதிப்புக்கான காரணத்தை அறிகின்றனர். இதனால் கால விரையம் ஏற்படுகிறது.
கால விரையத்தையும், பொருள் செலவையும் தவிர்க்க இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளோம். விவசாயிகள் தங்களது மொபைல் போன்களில் இந்த செயலியை பயன்படுத்தி பயிர் பாதிப்பை அறிந்து கொள்ள முடியும்.
அதற்காக, பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான பிரச்னைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்த அறிகுறிகளை புகைப்படங்கள் மற்றும் படக்காட்சிகள் மூலம், இதில் விளக்கியுள்ளோம்.
உதாரணமாக, ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல் பயிரில் நோய் தாக்குதலை பார்க்கிறார் என்றால், உடனே தனது ஆன்ராய்டு மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வேளாண் பல்கலை உருவாக்கிய நெல் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். நெல் பிரிவில் உள்ள நெல் இமேஜ்களை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் நோய் தாக்குதலுக்கு உண்டான பயிருடன் பொருந்தும் படத்தை தேர்ந்து, அதோடு ஒப்பிட்டு பார்த்தால், அது எந்த வகையான நோய் என்பது தெரிந்து விடும்.
இந்த செயலியில், பயிர் ஆலோசகர், பயிர் மருத்துவர், தகவலகம் என, மூன்று பிரிவுகள் உள்ளன. அதில் பயிர் மருத்துவர் பிரிவை தேர்வு செய்தால், பயிரை தாக்கிய நோயின் விபரம், காரணிகள் என்ன, தீர்வு என்ன போன்ற முழு விளக்களையும் அறியலாம். மேலும், 'பயிர் ஆலோசகர், தகவலகம்' பிரிவுகளை சொடுக்கி தேவையான தகவல்களை பெறலாம்.
முதல் கட்டமாக நெல், வாழை, கரும்பு, தென்னை, சிறுதானியங்கள் மற்றும் பசு மாடு, ஆகிய ஆறு பிரிவுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து அனைத்து முக்கிய பயிர்களுக்கும் இந்த செயலியில் விளக்கம் பெற வசதி செய்யப்படும்.
இவ்வாறு, கார்த்திகேயன் கூறினார்.
வேளாண் இ - விரிவாக்க பயிற்சித்துறை தலைவர் வெங்கட்பிரபு கூறுகையில், ''2013ம் ஆண்டு, கம்யூட்டரில் தெரிந்து கொள்ளும் வகையில், இணையதள பக்கத்தை உருவாக்கி இருந்தோம். கம்யூட்டரை அனைத்து விவசாயிகளாலும் பயன்படுத்த முடியவில்லை என்பதால் திட்டம் பலனளிக்கவில்லை. இப்போது ஆன்ராய்டு மொபைல் போனில் பயன்படுத்து செயலியை உருவாக்கி இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்து விவசாயிகள் அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலம் பெற முடியும்'' என்றார்.
கூகுள் பிளே ஸ்டோரில், tnau expert system என, 'டைப்' செய்து தங்களுக்குத் தேவையான 
செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

Source : Dinamalar

Tuesday, July 25, 2017

நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை: விவசாயி பாமயனின் பன்முகம்


மதுரையில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி மானாவாரியாக நடக்கிறது. 
தண்ணீர் பஞ்சம் மிகுந்த இப்பகுதியில் விவசாயத்தில் சாதனை படைப்பது சாதாரண காரியமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பை மூலதனமாக கொண்டு விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் இயற்கை விவசாயி பாமயன். திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி ரோட்டில் சோலைப்பட்டி விலக்கில் 'நிரந்த வேளாண் கலாச்சாரப் பண்ணை' (பெர்மனன்ட் அக்ரி கல்சர் பார்ம்) நடத்தி வருகிறார். இங்கு சுட்டெரிக்கும் வெயிலில் சொட்டு நீர் கூட உடனே ஆவியாகி விடும். உப்புச்சுவை மிக்க நீரில் இயற்கை விவசாயம் செய்வதற்காக உப்புச்சுவையை இயற்கை முறையில் மாற்றி தினமும் பயன் படுத்துகிறார் பாமயன்.இது எப்படி சாத்தியம் என்பது குறித்து பாமயன் கூறியதாவது: நிரந்த வேளாண் கலாசாரப் பண்ணையை உருவாக்குவதற்காக 
6 அடி ஆழம், 40 அடி அகலத்தில் மண் தொட்டி அமைத்தேன். அதில் பாலிதீன் பாய் விரித்து 194 லட்சம் லிட்டர் உப்பு நீர் தேக்கினேன். 
உப்புச்சுவை மற்றும் தண்ணீர் சத்துள்ளதாக (அமிலோ ஆசிட் வாட்டர்) மாற்றுவதற்காக தலா 400 எண்ணிக்கையில் ஜிலேபி கெண்டை, கட்லா, புது கெண்டை, விரால் மீன் குஞ்சுகளை தொட்டியில் விட்டுள்ளேன். மீன் குஞ்சுகளின் கழிவுகள் தண்ணீரை சத்துள்ளதாக மாற்றி விடுகிறது. அந்த தண்ணீரை வயல்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாய்ச்சுகிறேன். மீண்டும் தொட்டியில் தண்ணீர் நிரப்புகிறேன். தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மண் இல்லாத உணவு தானியங்கள் வளர்த்து வருகிறேன். தொட்டி அமைக்க 70 ஆயிரம் ரூபாய் செலவானது. அவரவர் வசதிக்கேற்ப குறைந்த செலவிலும் தொட்டி அமைக்கலாம். நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை என்பது மீன் கழிவு நீரில் விவசாயம், மாட்டுச்சாணத்தில் மண்புழு உரம், மீன்களுக்கு உணவாகும் மண்புழு, மீன் வளர்ப்பில் லாபம் என ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தை குறிக்கும் என்றார்.
தொடர்புக்கு 98420 48317.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Source : Dinamalar

பருத்தியை காயப்படுத்தும் அமெரிக்கன் காய்ப்புழு

பருத்தி பயிரில் அமெரிக்கன் காய்ப்புழு எனும் பச்சைக் காய்ப்புழுவின் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். இத் தாக்குதலுக்கு உள்ளான பூ மொட்டுகள் விரிந்து பின்னர் விழுந்து விடும். பாதித்த பகுதிகளில் வட்ட வடிவமான துளை காணப்படும். துளைகள் எச்சத்தினால் அடைக்கப்படாமல் சுத்தமாக காணப்படும். துளையின் கீழ் உள்ள புல்லி வட்ட இதழ்களில் புழு வெளியேற்றிய கழிவுகளை காணலாம். தழைச்சத்து உரம் அதிகப்பட்டு செழித்து அடர்ந்து வளர்ந்த பயிரில் அமெரிக்கன் காய்ப்புழுத்தாக்குதல் அதிகமாக இருக்கும். அமெரிக்கன் காய்ப்புழுவினை கட்டுப்படுத்த புரோபினோபாஸ் (2 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீர்) அல்லது ஸ்பின்னோசாடு (0.5 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தினை பயன்படுத்தலாம். பயிரின் வளர்ச்சியினை பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்து கரைசல் தேவைப்படும். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் ஆகிய திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொண்டு மாலை நேரத்தில் மருந்து தெளிக்கலாம். இதனால் புழு நல்ல முறையில் கட்டுப்படுவதோடு, நன்மை தரும் 
பூச்சிகள் பாதுகாக்கப்படும்.
முனைவர் ம.குணசேகரன்
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

Source : Dinamalar