Monday, August 22, 2016

பந்தல் காய்கறிகளுக்கு 50 சதவீதம் மானியம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், பந்தல் காய்கறி சாகுபடி முறையை ஊக்கப்படுத்தும் வகையில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பந்தல் காய்கறி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவரை, புடலை, பாகற்காய், கோவக்காய், பீர்க்கன் சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பந்தல் காய்கறி சாகுபடியில் ஆர்வத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதே போல் தேனீ வளர்ப்பு திட்டத்தில் 300 தேன் கூடு பெட்டிகள் வழங்கப்படும். தலா ரூ.60 ஆயிரம் மானியத்தில் 15 பவர் டில்லர்கள் வழங்கப்பட உள்ளதாக, தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ் வேந்தன் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment