Tuesday, October 13, 2015

15இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக். 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் . ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் 15 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் . ரவிகுமார் தலைமையில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், விவசாய சங்கத் தலைவர்கள், பாசன சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition_thirunelveli/tuticorin/2015/10/13/15%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/article3077405.ece

No comments:

Post a Comment