Monday, October 5, 2015

விவசாயிகளுக்கு ஊழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை: கலெக்டர் லட்சுமி வழங்கினார்



விழுப்புரம்,
விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையை கலெக்டர் லட்சுமி வழங்கினார்.
குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் ஓய்வூதியம், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, திருமண உதவித் தொகை என்று 418 மனுக்களை பெறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
உதவித்தொகை
கூட்டத்தில் முதல்அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையாக விவசாயி சேகருக்கு ரூ.2 ஆயிரத்து 750–க்கான காசோலையையும், ரங்கசாமிக்கு ரூ.4,250–க்கான காசோலையும், முத்துலிங்கம் என்பவருக்கு ரூ.2,250–க்கான காசோலையையும் கலெக்டர் லட்சுமி வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி, உதவி கலெக்டர்(பயிற்சி) ஜெயசீலன், தனித்துணை கலெக்டர்(சிறப்பு அமலாக்கதிட்டம்) இருதயமேரி, மாவட்ட தட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி செயலாளர் இந்திரா, ஊரக வளர்ச்சி முகமை உதவி ஆணையர்(கலால்) முகுந்தன், தனித்துணை கலெக்டர் காமராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், தாசில்தார்கள் உள்பட பலர்கலந்து 
கொண்டனர். 

No comments:

Post a Comment