குங்குமப்பூ: குளிர்பிரதேசங்களில் மட்டுமே குங்குமப்பூ துளிர் விடுகிறது. காஷ்மீர் மட்டுமே குங்குமப்பூ சாகுபடிக்கும் சாத்தியமாகி வருகிறது. இச்செடிகள் 10 முதல் 20 செ.மீ. உயரம் வரை வளரும். கிழங்குகள் மூலம் நடவு செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு சுமார் 1,80,000 கிழங்குகள் நடவு செய்யலாம். இயற்கை முறையாக பராமரிக்க வேண்டும். அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பூக்கின்றது. அந்த பூக்களின் மத்திய பகுதியில் உள்ள மகரந்த தாளே ""குங்குமப்பூ'' என்று அழைக்கப்படுகிறது.
இவை சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் மெல்லிய நார் போன்று காணப்படும். குங்குமப்பூ பூத்த 3 முதல் 4 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அவை 15 முதல் 20 நாட்கள் வரை வெயிலில் உலர வைக்கப்படுகிறது. அப்போது அந்தப் பூவில் உள்ள குங்குமப்பூக்கள் தனியாகப் பிரிந்து விடும். சுமார் 40 முதல் 50 பூக்களிலிருந்து 1 கிராம் அளவே குங்குமப்பூ கிடைக்கிறது.
குங்குமப்பூக்கள் மருந்தாகப் பயன்படுகின்றன. வாசனைக்காகவும், நிறத்திற்காகவும் மற்றும் உணவுக்காகவும் அதிகம் பயன்படுகின்றன. முதல் ரகப் பூக்கள் 1 கிலோ 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கொடைக்கானல் பகுதியில் குங்குமப்பூ கிழங்குகள் நடவு செய்து 4 வருடம் ஆகிறது. காஷ்மீரில் அக்டோபர் மாதத்தில் பூக்கும் பூக்கள் கொடைக்கானலில் செப்டம்பர் மாதத்திலேயே பூத்து விட்டன. இதுவரை 50க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.
கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென இருக்க வேண்டும் என்ற ஆசையில் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்துவார்கள். ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கருவுற்ற 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுகிறது. குழந்தைக்கு தேவையான சத்தும் கிடைக்கிறது. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : அ.வெங்கடேஷ், பயிர் நோயியல் துறை, த.வே. பல்கலைக்கழம், கோயம்புத்தூர்-641 003
உளுந்து சாகுபடி: ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தகவல் தருகிறார். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை இரண்டுசால் புழுதி உழவு செய்ய வேண்டும். 150 கிலோ கன ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் கலந்து புட்டு பதத்திற்கு பிசைந்து வயல் முழுக்க பரவலாக தெளிக்க வேண்டும். கன ஜீவாமிர்தம் பறக்காமல் இருக்கவும் அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பின்பு 20 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து 7 கிலோ ஆடுதுறை-5 ரக விதை உளுந்தை ஜீவாமிர்த கரைசலில் அமிழ்த்தி விதைநேர்த்தி செய்து, பரவலாக தெளித்து ரோட்டோ வேட்டர் மூலம் மேலோட்டமாக ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் கட்டி வரவேண்டும். 7ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 5 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் இதே அளவு ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 45ம் நாள் 5லிட்டர் தேமோர்க்கரைசலை 115 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாலை நேரங்களிலேயே தெளிக்க வேண்டும். 65 நாட்களில் உளுந்து அறுவடைக்கு வந்து விடும்.
ஜீவாமிர்தம்: பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் ஒரு கைப்பிடி நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைக்க வேண்டியது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை இதை கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு நாளுக்கான அளவு. இதை பயிர் வளர்ச்சி ஊக்கியாக பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கன ஜீவாமிர்தம்: பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலந்தால் போதும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது. மகசூல் ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்றார் விவசாயி. தொடர்புக்கு : ராமலிங்கம், அலைபேசி : 78711 26888.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
இவை சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் மெல்லிய நார் போன்று காணப்படும். குங்குமப்பூ பூத்த 3 முதல் 4 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அவை 15 முதல் 20 நாட்கள் வரை வெயிலில் உலர வைக்கப்படுகிறது. அப்போது அந்தப் பூவில் உள்ள குங்குமப்பூக்கள் தனியாகப் பிரிந்து விடும். சுமார் 40 முதல் 50 பூக்களிலிருந்து 1 கிராம் அளவே குங்குமப்பூ கிடைக்கிறது.
குங்குமப்பூக்கள் மருந்தாகப் பயன்படுகின்றன. வாசனைக்காகவும், நிறத்திற்காகவும் மற்றும் உணவுக்காகவும் அதிகம் பயன்படுகின்றன. முதல் ரகப் பூக்கள் 1 கிலோ 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கொடைக்கானல் பகுதியில் குங்குமப்பூ கிழங்குகள் நடவு செய்து 4 வருடம் ஆகிறது. காஷ்மீரில் அக்டோபர் மாதத்தில் பூக்கும் பூக்கள் கொடைக்கானலில் செப்டம்பர் மாதத்திலேயே பூத்து விட்டன. இதுவரை 50க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.
கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென இருக்க வேண்டும் என்ற ஆசையில் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்துவார்கள். ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கருவுற்ற 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுகிறது. குழந்தைக்கு தேவையான சத்தும் கிடைக்கிறது. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : அ.வெங்கடேஷ், பயிர் நோயியல் துறை, த.வே. பல்கலைக்கழம், கோயம்புத்தூர்-641 003
உளுந்து சாகுபடி: ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தகவல் தருகிறார். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை இரண்டுசால் புழுதி உழவு செய்ய வேண்டும். 150 கிலோ கன ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் கலந்து புட்டு பதத்திற்கு பிசைந்து வயல் முழுக்க பரவலாக தெளிக்க வேண்டும். கன ஜீவாமிர்தம் பறக்காமல் இருக்கவும் அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பின்பு 20 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து 7 கிலோ ஆடுதுறை-5 ரக விதை உளுந்தை ஜீவாமிர்த கரைசலில் அமிழ்த்தி விதைநேர்த்தி செய்து, பரவலாக தெளித்து ரோட்டோ வேட்டர் மூலம் மேலோட்டமாக ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் கட்டி வரவேண்டும். 7ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 5 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் இதே அளவு ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 45ம் நாள் 5லிட்டர் தேமோர்க்கரைசலை 115 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாலை நேரங்களிலேயே தெளிக்க வேண்டும். 65 நாட்களில் உளுந்து அறுவடைக்கு வந்து விடும்.
ஜீவாமிர்தம்: பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் ஒரு கைப்பிடி நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைக்க வேண்டியது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை இதை கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு நாளுக்கான அளவு. இதை பயிர் வளர்ச்சி ஊக்கியாக பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கன ஜீவாமிர்தம்: பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலந்தால் போதும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது. மகசூல் ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்றார் விவசாயி. தொடர்புக்கு : ராமலிங்கம், அலைபேசி : 78711 26888.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
No comments:
Post a Comment