Thursday, October 15, 2015

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் உண்டு நன்மை!




'இயற்கை வேளாண்மை   மற்றும் பாதுகாப்பான உணவு' குறித்த கருத்தரங்கம் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது .

இந்தக் கருத்தரங்கத்தை 'நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை மற்றும் நமது நெல்லை காப்போம்' இயக்கம் இணைந்து நடத்தியது. பெண்கள் 100 பேர் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர்.

"ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் அதிகமாகப் பயன்படுத்தி வருவதால், பயிர்கள் நச்சுத்தன்மை அடைகிறது. ஒரு காலத்தில் சர்க்கரை வியாதி 50 வயதுக்கு மேல்தான் வந்தது. ஆனால் இன்று 30 வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது. அதுக்கு முக்கிய காரணம் பேசிக் ப்ளோரா ( Basic flora) என்று சொல்லக்கூடிய தாவரங்கள் விஷத்தன்மை அடைந்ததுதான்" என்று மருத்துவர் முத்துக்குமார் பேசினார்.
http://www.vikatan.com/news/article.php?aid=53664

No comments:

Post a Comment