சென்னை,
லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஊட்டி, கோவை, வால்பாறை, தேனி, மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
பருவமழை தீவிரம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்தது. இதன்காரணமாக வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முற்றிலும் வடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதியான தாம்பரத்தில் லேசாக மழை தூறியது. இதனால் மழை வலுத்துவிடுமோ என்று சென்னை மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நினைத்தனர். அவர்கள் நினைத்தபடி மழை வலுக்கவில்லை.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி
வங்கக்கடலில் தெற்கு ஆந்திராவையொட்டி நிலவி வந்த தாழ்வு நிலை மறைந்து விட்டது. உள் மாவட்டங்களில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவு செய்த மழையின் அடிப்படையில் அதிக பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 14 செ.மீ.மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 13 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியப்பகுதிகளில் கனமழை பெய்யும். கோவை, ஊட்டி, வால்பாறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம்.
மேற்கு தொடர்ச்சி மலை
தமிழ்நாடு முழுக்க மழை பெய்யவேண்டுமென்றால் வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வேண்டும். தற்போது லட்சத்தீவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் உள்ளது. அரபிக்கடலில் இந்த நிகழ்வு இருந்த போதிலும் வங்கக்கடலில் உள்ள ஈரக்காற்றை தமிழகம் ஊடாக உள்வாங்கும். அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை 44 செ.மீ. ஆனால் இதுவரை 39.3 செ.மீ.மழை பெய்துவிட்டது. இந்த வருடம் நீண்ட கால வானிலை அறிக்கைபடி சராசரியாக பெய்யக்கூடிய மழையைவிட சற்று கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மழை அளவு
சங்கரன்கோவில் 14 செ.மீ., ராஜபாளையம் 13 செ.மீ., ராதாபுரம், பாளையங்கோட்டை, ஆயிக்குடி தலா 10 செ.மீ., உத்தமபாளையம், கூடலூர் தலா 9 செ.மீ., குளச்சல், பேச்சிப்பாறை, சிவகிரி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 6 செ.மீ., நாகர்கோவில், மைலாடி, பேரையூர், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, வாடிப்பட்டி தலா 5 செ.மீ., செங்கோட்டை, கன்னியாகுமரி, தக்கலை, வால்பாறை தலா 4 செ.மீ., போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தான்குளம், மரக்காணம், திருவள்ளூர் தலா 3 செ.மீ., பூந்தமல்லி, கொடைக்கானல், பாபநாசம், குழித்துறை, வானூர், இரணியல், தூத்துக்குடி தலா 2 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் உள்பட 25 இடங்களில் தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஊட்டி, கோவை, வால்பாறை, தேனி, மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
பருவமழை தீவிரம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்தது. இதன்காரணமாக வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முற்றிலும் வடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதியான தாம்பரத்தில் லேசாக மழை தூறியது. இதனால் மழை வலுத்துவிடுமோ என்று சென்னை மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நினைத்தனர். அவர்கள் நினைத்தபடி மழை வலுக்கவில்லை.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி
வங்கக்கடலில் தெற்கு ஆந்திராவையொட்டி நிலவி வந்த தாழ்வு நிலை மறைந்து விட்டது. உள் மாவட்டங்களில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவு செய்த மழையின் அடிப்படையில் அதிக பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 14 செ.மீ.மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 13 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியப்பகுதிகளில் கனமழை பெய்யும். கோவை, ஊட்டி, வால்பாறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம்.
மேற்கு தொடர்ச்சி மலை
தமிழ்நாடு முழுக்க மழை பெய்யவேண்டுமென்றால் வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வேண்டும். தற்போது லட்சத்தீவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் உள்ளது. அரபிக்கடலில் இந்த நிகழ்வு இருந்த போதிலும் வங்கக்கடலில் உள்ள ஈரக்காற்றை தமிழகம் ஊடாக உள்வாங்கும். அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை 44 செ.மீ. ஆனால் இதுவரை 39.3 செ.மீ.மழை பெய்துவிட்டது. இந்த வருடம் நீண்ட கால வானிலை அறிக்கைபடி சராசரியாக பெய்யக்கூடிய மழையைவிட சற்று கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மழை அளவு
சங்கரன்கோவில் 14 செ.மீ., ராஜபாளையம் 13 செ.மீ., ராதாபுரம், பாளையங்கோட்டை, ஆயிக்குடி தலா 10 செ.மீ., உத்தமபாளையம், கூடலூர் தலா 9 செ.மீ., குளச்சல், பேச்சிப்பாறை, சிவகிரி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 6 செ.மீ., நாகர்கோவில், மைலாடி, பேரையூர், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, வாடிப்பட்டி தலா 5 செ.மீ., செங்கோட்டை, கன்னியாகுமரி, தக்கலை, வால்பாறை தலா 4 செ.மீ., போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தான்குளம், மரக்காணம், திருவள்ளூர் தலா 3 செ.மீ., பூந்தமல்லி, கொடைக்கானல், பாபநாசம், குழித்துறை, வானூர், இரணியல், தூத்துக்குடி தலா 2 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் உள்பட 25 இடங்களில் தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
http://www.dailythanthi.com/News/State/2015/11/20003805/Today-in-many-places-in-Tamil-Nadu-rain.vpf
No comments:
Post a Comment