Wednesday, March 2, 2016

பாமாயில் சாகுபடி கண்டுணர்வு பயிற்சி சுற்றுலா


போளூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய்ப்பனை (பாமாயில்) இயக்கத் திட்டத்தின் கீழ் எண்ணெய்ப்பனை பயிரிடுவது குறித்த கண்டுணர்வு பயிற்சி சுற்றுலாவுக்காக விவசாயிகள் அண்மையில் அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள எண்ணெய்ப்பனை வயல்களுக்கு போளூர் வட்டார வேளாண் துறை சார்பில் இந்தப் பயிற்சிக்காக அந்த வட்டாரத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் பயிற்சியின்போது, எண்ணெய்ப்பனை சாகுபடி விவசாயிகளுக்கு அரசு சார்பில் 8 ஆயிரம் எண்ணெய்ப்பனைக் கன்றுகள் மானியத்திலும், ஹெக்டேருக்கு முதலாமாண்டு பராமரிப்பு செலவாக ரூ.4 ஆயிரமும், ஊடு பயிராக சாகுபடி செய்ய ரூ.3 ஆயிரமும் மானியமாக அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மேலும், அடுத்த ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ.4 ஆயிரமும், ஊடு பயிராக சாகுபடி செய்ய ரூ.3 ஆயிரமும் அரசு மானியம் வழங்கப்பட உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
இந்தப் பயிற்சியின் மூலம் எண்ணெய்ப்பனை சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொண்டனர். முன்னதாக விவசாயிகள் சென்ற பேருந்தை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், போளூர் வேளாண்மை உதவி இயக்குநர் வடமலை ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி வேளாண்மை அலுவலர்கள் அசோக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விவசாயிகளுடன் சென்றனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment