Monday, March 21, 2016

எடையுடன் கூடிய மகசூல் பெற நீர் பாசனம் செய்யும் முறை

கரும்பு பயிரில் எடையுடன் கூடிய மகசூல் பெற நீர் பாசனம் செய்ய வேண்டிய பருவங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:    கரும்பு பயிர் நிமிர்ந்து நிற்பது, வெயிலின் தாக்கத்தால் வாடாமல் இருப்பது, வேர் மூலம் ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்வது, ஒளி சேர்க்கை மூலம் சர்க்கரை மற்றும் மாவுப்பொருட்களை உற்பத்தி செய்வது, பயிரினுள் நடைபெறும் வேதியில் மாறுதலுக்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

வளரும் பயிரின் எடையில் 80 முதல் 85 சதவீதம் வரை நீர் உள்ளது. ஒரு டன் கரும்பு விளைவிக்க 125 டன் நீர் தேவைப்படுகிறது. ஒரு டன் சர்க்கரை உற்பத்தி செய்ய 1,350 டன் நீரை கரும்பு பயிர் எடுத்து கொள்கிறது. பாசன நீரை பருவத்தை பொருத்து பல்வேறு இடைவெளிகளில் 38 முதல் 40 முறை பாசனம் செய்ய வேண்டும். 1 முதல் 35 வரை நாட்களான முளைப்பு பருவத்தில் 7 நாட்கள் இடைவெளியில் 5 பாசனமும். 36 முதல் 100 நாட்கள் வரையிலான தூர் கட்டும் பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 5 பாசனமும், 101 முதல் 270 நாட்கள் வரையான வளர்ச்சி பருவத்தில் 8 நாட்கள் இடைவெளியில் 21 பாசனம், 271 முதல் அறுவடை வரையிலான முதிர்ச்சி பருவத்தில் 13 நாட்கள் இடைவெளியில் 6 பாசனம் என மொத்தம் 38 முறை கரும்புக்கு பாசனம் செய்வதன் மூலம் நீர் சத்து நிறைந்த நல்ல எடையுடன் கூடிய அதிக சர்க்கரை, பிழிதிறன் கொண்ட கரும்பு நமக்கு மகசூலாக கிடைக்கிறது.

source : Dinakaran

No comments:

Post a Comment