Wednesday, March 2, 2016

செட்டிநாடுக்கு 1,000 டன் பொதுரக நெல் அனுப்பிவைப்பு


நீடாமங்கலத்திலிருந்து செட்டிநாடுக்கு 1,000 டன் பொதுரக நெல் அரவைக்காக செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தொடர்ந்து அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் எடையுள்ள நெல் மூட்டைகள் 87 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது.
நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் 70 பேர் சரக்கு ரயிலின் 29 பெட்டிகளில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து, நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் செட்டிநாடுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Source : Dinamani

No comments:

Post a Comment