Monday, March 28, 2016

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி


நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை (மார்ச் 31) காலை
9 மணிக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இம் முகாமில் விதைகள் மூலம் பரவக்கூடிய நோய்கள், எதிர் உயிர் பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளைப் பயன்படுத்துதல், விதை நேர்த்தி செய்தல், மருந்து தெளிப்பு முறைகள், பூச்சி, நோய்களைக் கண்டறியும் முறைகள், உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்துதல், தாவர நூல் புழுக்களை கண்டறிந்து கட்டுப்படுத்துதல், விதைகளைச் சேமித்து வைத்தல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 - 266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 30-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் முன்பதிவு செய்யும் 30 பேருக்கு மட்டும் பயிற்சியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Dinamani

No comments:

Post a Comment