Wednesday, March 2, 2016

7.15 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


மாவட்டத்தில் 7.15 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் தாக்குதல் வராமல் தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுக்கு 2 முறை இலவச கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
10-ஆம் சுற்று தொடக்கம்: இந்நிலையில், 10-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 2016-ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலையை அடுத்த சு.ஆண்டாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் முகாமைத் தொடங்கி வைத்தார்.
119 மருத்துவக் குழுக்கள்: மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி போட 119 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் 7 லட்சத்து 15 ஆயிரத்து 603 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது  என்று விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment