Monday, February 22, 2016

மானியத்தில் தீவனப்புல் நறுக்கும் இயந்திரம்


சேலம் மண்டல கால்நடைதுறை சார்பில், கால்நடை வளர்ப்பு பணிகளை மேம்படுத்த இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரிதாக இருக்கும் தீவனப்புல்லை கால்நடைகள் உண்ணும்போது, வீணாவதை தடுக்க, தீவனப்புல் நறுக்கும் இயந்திரம், கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன் விலை 16 ஆயிரம் ரூபாய். கால்நடை விவசாயிகளுக்கு, 4,000 ரூபாய் மானிய விலையில், தீவனப்புல் நறுக்கும் இயந்திரம் வழங்கப்படுகிறது. 25 சதவீத தொகையை டி.டி.,யாக செலுத்தி, இயந்திரத்தை பெற்று கொள்ளலாம். மாவட்டத்தில், 134 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில்,''257 நீர் இரைப்பு இயந்திரம் வழங்கப்பட்டு விட்டது. தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள், 240 வழங்கிய நிலையில் மேலும், 134 பேருக்கு வழங்கப்படுகிறது,'' என்றனர்.


source : Dinamalar

No comments:

Post a Comment