Wednesday, February 24, 2016

சொட்டு நீர்பாசன கருவிகள் பராமரிப்பு குறித்த பயிற்சி

 கோபி அருகே நடுப்பாளையத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், சொட்டு நீர் பாசன கருவிகள் பராமரிப்பது குறித்த பயிற்சி நடந்தது. நம்பியூர் வட்டார அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி பயிற்சி குறித்து பேசினார். இப்பயிற்சியில் குருமந்தூர், கரட்டுப்பாளையம், கூடக்கரை, மலையப்பாளையம், கோசனம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர் பிரியா நன்றி கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment