Tuesday, February 23, 2016

விவசாயிகள் குறைதீர் கூட்டம்


திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 26ம் தேதி, காலை 11:00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய், மின்வாரியம், கூட்டுறவு, பொதுப்பணி, வேளாண்மை பொறியியல், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை, மற்றும் இதர வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகள் குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர். எனவே இம்மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு, ஆட்சியர் சுந்தரவல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment