Monday, February 1, 2016

கொங்கணாபுரம் வேளாண்மை சங்கத்தில் ரூ.4 கோடியே 40 லட்சத்திற்கு பருத்தி ஏலம்



இடைப்பாடி,
கொங்கணாபுரத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இடைப்பாடி, மேட்டூர், சங்ககிரி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொண்டார்கள். மொத்தம் 24 ஆயிரம் பருத்திமூட்டைகள் ரூ.4 கோடியே 40 லட்சத்திற்கு ஏலம் போனது. டி.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் ரூ.5,900 முதல் ரூ. 6,400 வரை ஏலம் பேனது. சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.5,900 முதல் ரூ.6,400 வரை ஏலம் போனது. இதில் வெளியூர் வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.




Source : Dailythanthi

No comments:

Post a Comment