Wednesday, March 2, 2016

விவசாயிகள், வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி


பழநி வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் சீப்பர்ஸ் அட்மா திட்டம் மூலம் வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
பழநி வேளாண் உதவி இயக்குனர் சுருளியப்பன் தலைமை வகித்து பயிர் கழிவுகள் மேலாண்மை என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், ""மண்புழு உரக்கூடம் அமைத்து அறுவடைக்குபின் பயிர்களின் கழிவுகளை சிறந்து முறையில் பயன்படுத்துவதால் உரச்செலவு குறைவாக இருக்கும். மண்வளம் பெருகும். மேலும் மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு நன்மை செய்து பயிர் அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும், என்றார்.
உழவர்சந்தை அலுவலர் காளிமுத்து தென்னை மரங்களின் கழிவுகளை பயன்படுத்துவது எப்படி, மக்காச்சோள பயிர் கழிவுகள் மேலாண்மை குறித்து பேசினார். அட்மா திட்ட மேலாளர் கோசல்நாத், உதவி தொழிற்நுட்ப மேலாளர்கள் மணிகண்டராஜா, ஜெகநாதன ஏற்பாடுகளை செய்தனர்.


Source : Dinamalar

No comments:

Post a Comment