Wednesday, January 27, 2016

நாளை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்


பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜன. 28) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார் தலைமையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண்மை இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

source : Dinamani

No comments:

Post a Comment