Friday, January 22, 2016

29-இல் வேளாண் குறைகேட்புக் கூட்டம்


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் குறைகேட்புக் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி  காலை 11 முதல் 11.30 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
 இதில் விவசாயிகள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment