Friday, July 22, 2016

இயந்திர முறையில் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

மேல்மலையனூர் வட்டாரத்திற்கு 63000 மெட்ரிக்டன்கள் உற்பத்தி இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
சாதாரண முறையில் நெல் சாகுபடி செய்வதைவிட இயந்திரமுறையில் நெல் நடவு சாகுபடி செய்வதால் இடுபொருள் செலவு, சாகுபடி செலவு குறைவதுடன் மகசூலும் 20%க்கு மேல் கூடுதலாக கிடைக்கிறது. எனவே தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.5000 மானியம் வழங்கப்படுகிறது. மேல்மலையனூர் வட்டாரத்தில் நெல் இயந்திர நடவு சாகுபடிக்கு 750 ஹெக்டேர் இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேல்மலையனூர் வட்டாரத்திலுள்ள நெல் இயந்திர முறையில் நடவு சாகுபடி செய்யும் விவசாயிகள் இம்மானியத்தினை பெற தங்கள் வயலில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்படும். பாஸ் போட்டோ, சிட்டா, அடங்கல், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களான ரகுபதி 94423 96251, சக்திவேல் 94458 90715, வெங்கடேசன் 97915 71163, தமிழ்மணி 90474 32137 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்வதுடன் மேலும் கூடுதல் விவரங்கள் பெற மேல்மலையனூர் வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Source : Dinakaran

No comments:

Post a Comment