Wednesday, November 11, 2015

நெல்விதை நேர்த்தி பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம்


வாடிப்பட்டி
வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு நெல்விதை நேர்த்தி செயல் விளக்க பயிற்சி முகாமை ஆராய்ச்சி நிலைய மாணவிகள் விளக்கி கூறினர்.
நெல் விதை நேர்த்தி பயிற்சி
மதுரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4ஆம் ஆண்டு கிராமபுற வேளாண்மை பணி அனுபவதிட்ட மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு நெல்விதை நேர்த்தி பற்றிய செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு விவசாயி சுப்பாராஜ் தலைமை தாங்கினார்.
வேளாண்மை கல்லூரி மாணவி பாக்கியலெட்சுமி திருந்திய நெல்சாகுபடி பற்றி பேசினார். இதில் 600 கிராம் எடையுள்ள 3பாக்கெட் அசோஸ்பைரில்லமும் 600கிராம் எடையுள்ள 3பாக்கெட் பாஸ்போபேக்டீரியா ஆகியவற்றை ஒருலிட்டர் அரிசி கஞ்சியுடன் கலந்து 1 எக்டோருக்கு உரிய விதைகளை அதில் போட்டு கலக்கவேண்டும்.
வேகமாக வளரும் பயிர்கள்
பின்பு அரைமணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இந்த விதைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊரவைத்து காலையில் எடுத்து முளைப்புக்கு வைக்கவேண்டும். பின்பு நாற்றாங்காலில் விதைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் பயிர்களுக்க தழை மற்றும் மணிசத்து அதிகரிக்கிறது.
மேலும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. இதனால்; பயிர்கள் வேகமாக வளர்கிறது. இவ்வாறு பயிற்சி முகாமில் விளக்கி கூறப்பட்டது. இதில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கல்பனா, பிரதீபா, மோனிகா, ஷாத்திகா, வைத்தீஸ்வரி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment