ஊட்டி
ஊட்டியில் ஒரு விவசாயி தோட்டத்தில் 2 கிலோ எடையுள்ள ராட்சத முள்ளங்கி விளைந்துள்ளது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு சென்றனர்.
கோடப்பமந்து
ஊட்டி கோடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். மேலும் தனது நிலத்தில் விளைந்த காய்கறிகளை ஊட்டி உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனது நிலத்தில் விளைந்த முள்ளங்கியை அறுவடை செய்து, உழவர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். அப்போது அதில் 2 முள்ளங்கிகள் அதிக எடையுடன் ராட்சத அளவில் விளைந்து இருப்பதை கண்டு வியப்படைந்தார். இதனை உழவர்சந்தைக்கு வந்த பொதுமக்களும் கண்டு வியந்து சென்றனர்.
2 கிலோ எடை
இது குறித்து விவசாயி பிரகாஷ் கூறியதாவது:–
ஒரு முள்ளங்கி சாதாரணமாக 250 கிராம் முதல் அதிகபட்சம் 500 கிராம் வரை எடை இருக்கும். ஆனால் தற்போது விளைந்த 2 ராட்சத முள்ளங்கிகளில் ஒன்று 2 கிலோவும் மற்றொன்று 1½ கிலோவும் இருக்கிறது. இதுபோன்ற ராட்சத முள்ளங்கி எப்போதாவது தான் விளையும்.
இதேபோல் பெரிய அளவிலான பட்டாணியும் தற்போது விளைந்து உள்ளது. சாதாராண பட்டாணியில் 3 அல்லது 4 விதைகள்தான் இருக்கும். ஆனால் இதில் 6 முதல் 8 விரையிலான விதைகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dailythanthi
No comments:
Post a Comment