Friday, November 6, 2015

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்புப் பயிற்சி


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியில் மதுரை வேளாண்மைக் கல்லூரி 4ஆம் ஆண்டு கிராம தங்கல் வேளாண்மை பணி அனுபவத்திட்ட மாணவிகள் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய செயல்விளக்க பயிற்சியளித்தனர்.
     இந்த முகாமுக்கு ஊராட்சித் தலைவர் ராமு தலைமை வகித்தார். இதில் மண்புழு உரம் தயாரிப்பது பற்றியும், இயற்கை உரத்தினை தோட்டங்களில் பயன்படுத்துவதன் மூலம்  சத்தான காய்கறிகள் உற்பத்தி செய்ய முடியும் என்று மாணவிகள் பாக்கியலெட்சுமி, பிரதீபா, மோனிகா, ஷாத்திகா, வைத்தீஸ்வரி ஆகியோர் விளக்கி கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment