Friday, November 6, 2015

மானாவாரி பயிர் சாகுபடியால் கால்நடை தீவனத்திற்கு தீர்வு



நிலக்கோட்டை:நிலக்கோட்டை கிராமப்பகுதிகளில் மானாவாரி பயிர்கள் சாகுபடி அதிகரித்துள்ளதால் கால்நடை தீவன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.மைக்கேல்பாளையம், செங்கோட்டை, அவையம்பட்டி, பாலம்பட்டி, பொம்மனம்பட்டி பகுதிகளில் கண்மாய் பாசனத்தை நம்பியே விவசாயம் நடக்கிறது. அதிக மழை இல்லாததால் குறுகிய கால மானாவாரி பயிர்களான கம்பு, சோளத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இப்பயிர்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவை இல்லை. மூன்றே மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
மூன்று மாதங்களுக்குள் மழை பெய்தால் சோளம், கம்பு சாகுபடி செய்யலாம். மழை பெய்யாவிட்டால் தட்டைகள் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படும். பாலம்பட்டியைச் சேர்ந்த முருகன் கூறுகையில்,
""
வசதி உள்ளவர்கள் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். பல விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்துள்ளதால் இந்த ஆண்டு கால்நடை தீவனத்திற்கு பிரச்னை இருக்காது, எங்கள் பகுதி கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்'' என்றார். 


No comments:

Post a Comment