Friday, November 6, 2015

மேலூர் பகுதி விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணைக் கருவிகள்


மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு, ரூ. 13 லட்சம் மதிப்புள்ள பண்ணைக் கருவிகள் மானிய விலையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
  தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ், மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு, ரூ. 12.89 லட்சம் மதிப்புள்ள 8 பவர் டில்லர்களும், 2 ரோட்டவேட்டர்களும் வேளாண்மைத் துறையினர் சார்பில் வழங்கப்பட்டன. இவற்றுக்கு ரூ. 6.70 லட்சம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
  மேலூர் வேளாண் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு பவர் டில்லர், ரோட்டவேட்டர்களையும் மேலூர் தொகுதி எம்.எல்.. ஆர். சாமி வழங்கினார்.
  இதில், வேளாண் உதவி இயக்குநர்கள் மேலூர் . சரவணன், கொட்டாம்பட்டி .திருஞானம் மற்றும் மேலூர் நகர்மன்றத் தலைவர் செ. சரவணன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/11/07/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3117838.ece

No comments:

Post a Comment