Sunday, November 8, 2015

வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு



தென் மேற்கு வங்கக் கடலில் புதியக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாறக்கூடும்.
இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.  இந்நிலையில் சென்னை மற்றும் நாகை கடற்பகுதிகளில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
தமிழக வடக்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 60 கி.மீட்டர் முதல் 70 கி.மீட்டர் வரை காற்று வீச்சும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் நாளை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நாளை, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment