Sunday, November 8, 2015

மானியத்தில் விவசாய கருவிகள்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் மானிய விலையில் விவசாய கருவிகள் வழங்கப்படுகின்றன. வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தில் நெல் விவசாயிகளுக்கு மானியத்தில் விவசாய கருவிகள் வழங்கப்படுகின்றன. இதில் விதையிடும் கருவிகள் 50 சதவீதம் மானியத்திலும், 20 குதிரை திறனுக்கு மேற்பட்ட டிராக்டருக்கு ரூ.1.25 லட்சம் மானியத்திலும் வழங்கப்படுகின்றன. தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனர்களிடம் பயிர் சாகுபடி அடங்கல் சான்று, ரேஷன் கார்டு, சிட்டா நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அடிப்படையில் விதையிடும் கருவிகள் வழங்கப்படும், என்றார்http://www.dinamalar.com/district_detail.asp?id=1382957

No comments:

Post a Comment