Sunday, November 8, 2015

விவசாயிகளுக்கு ரூ. 7.80 லட்சத்தில் வேளாண் கருவிகள்



புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ. 7.80 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளை வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது:
வேளாண் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள 16 விவசாயிகளுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரூ. 7.29 லட்சம் மதிப்புள்ள ரொட்டோவேட்டர் கருவிகளும், 2 பயனாளிகளுக்கு மானிய விலையில் ரூ. 51 ஆயிரம் மதிப்பில் விதை மற்றும் உரமிடும் கருவியும் என மொத்தம் ரூ. 7.80 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகஅரசு வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுப்பொருட்கள், தென்னங்கன்றுகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், தரமான விதைகளையும் வழங்கி வருகிறது. எனவே, அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறும் விவசாயிகள் அதனை உரிய முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இதில் வேளாண் இணை இயக்குநர் த. சந்திரசேகரன், நோóமுக உதவியாளர் (வேளாண்மை) நாகேந்திரன், துணை இயக்குநர் சதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment