ராமநாதபுரம்: வறட்சியான பகுதிகளில் தென்னைகளுக்கு உரிமட்டைகள் மூலம் நீர் பராமரிக்க ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் யோசனை வழங்கியுள்ளது.
தென்னைகளுக்கு பருவநிலை, மண்ணின் தன்மை, மரத்தின் வயது பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். ஓராண்டு வரை தென்னைகளுக்கு ஒரு நாள் இடைவெளியில் 10 லிட்டர் நீர், 2 முதல் 3 வயது மரங்களுக்கு வாரம் இருமுறை 40 லிட்டர் நீர், பின் வாரம் ஒருமுறை 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இதனால் தென்னைகளுக்கு நீர்மேலாண்மை முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் வறட்சியான பகுதிகளில் தென்னை தோப்புகளில் உரிமட்டைகள் மூலம் நீரை பராமரிக்க
ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீகன்பால், உதவி பேராசிரியர் அருள்மொழி கூறியதாவது: இரண்டு தென்னை மர வரிசைகளுக்கு மத்தியில் 2 மீ., அகலம், 50 செ.மீ., ஆழத்தில் குழி தோண்ட வேண்டும். அதில் தென்னை உரிமட்டைகளின் நார்ப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு அடுக்க வேண்டும். அதன் மீது 5 செ.மீ., உயரத்திற்கு மண் இட வேண்டும். அதேபோன்று 3 அடுக்குகளை
ஏற்படுத்த வேண்டும்.இதன்மூலம் மழைநீர் வழிந்தோடாமல் உரிமட்டைகளால் உறிஞ்சப்படும். மட்டைகள் தன் எடையை போன்று 8 மடங்கு நீரை உறிஞ்சும். இந்நீர் குழியின் அடிப்பகுதி வழியாக தென்னைகளின் வேர்களுக்கு 5 மாதங்களுக்கு ஈரபதத்தை கொடுக்கும். மேலும் உரங்கள் நன்கு கரையவும் உதவும். ஒரு குழிக்கு 250 மட்டைகள் தேவைப்படும். பல மாதங்களுக்கு பின்
மட்டைகள் மக்கி உரமாக மாறிவிடும். 100 மக்கிய மட்டைகள் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்திற்கு சமம், என்றனர்.
தென்னைகளுக்கு பருவநிலை, மண்ணின் தன்மை, மரத்தின் வயது பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். ஓராண்டு வரை தென்னைகளுக்கு ஒரு நாள் இடைவெளியில் 10 லிட்டர் நீர், 2 முதல் 3 வயது மரங்களுக்கு வாரம் இருமுறை 40 லிட்டர் நீர், பின் வாரம் ஒருமுறை 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இதனால் தென்னைகளுக்கு நீர்மேலாண்மை முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் வறட்சியான பகுதிகளில் தென்னை தோப்புகளில் உரிமட்டைகள் மூலம் நீரை பராமரிக்க
ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீகன்பால், உதவி பேராசிரியர் அருள்மொழி கூறியதாவது: இரண்டு தென்னை மர வரிசைகளுக்கு மத்தியில் 2 மீ., அகலம், 50 செ.மீ., ஆழத்தில் குழி தோண்ட வேண்டும். அதில் தென்னை உரிமட்டைகளின் நார்ப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு அடுக்க வேண்டும். அதன் மீது 5 செ.மீ., உயரத்திற்கு மண் இட வேண்டும். அதேபோன்று 3 அடுக்குகளை
ஏற்படுத்த வேண்டும்.இதன்மூலம் மழைநீர் வழிந்தோடாமல் உரிமட்டைகளால் உறிஞ்சப்படும். மட்டைகள் தன் எடையை போன்று 8 மடங்கு நீரை உறிஞ்சும். இந்நீர் குழியின் அடிப்பகுதி வழியாக தென்னைகளின் வேர்களுக்கு 5 மாதங்களுக்கு ஈரபதத்தை கொடுக்கும். மேலும் உரங்கள் நன்கு கரையவும் உதவும். ஒரு குழிக்கு 250 மட்டைகள் தேவைப்படும். பல மாதங்களுக்கு பின்
மட்டைகள் மக்கி உரமாக மாறிவிடும். 100 மக்கிய மட்டைகள் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்திற்கு சமம், என்றனர்.
No comments:
Post a Comment