Friday, November 6, 2015

அழகப்பா பல்கலை., பொருளியல் துறை வேளாண் நூல் இங்கிலாந்தில் வெளியீடு



 காரைக்குடி:அழகப்பா பல்கலை., பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில், எழுதப்பட்ட, வேளாண்மை குறித்த நுால், இங்கிலாந்தின் தலை சிறந்த பதிப்பகமான ரவுட்லெட்ஜி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது, என துணைவேந்தர் சுப்பையா கூறினார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சி துறையானது 2011-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துறை தலைவர் நாராயணமூர்த்தி, நபார்டு இருக்கை பேராசிரியர் விருது பெற்றுள்ளார். இந்தியாவில் வழங்கப்படும் ஐந்து விருதில் இது ஒன்று. இதன் மூலம் ரூ.1.25 கோடி அளவிற்கான நிதி நபார்டு வங்கி மூலம் இந்த இருக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்திய வேளாண் பொருளியல் கழகத்தால் கொடுக்கப்படும், மிக சிறந்த இந்திய வேளாண்மை பொருளியல் ஆராய்ச்சியாளர் விருதும் துறை தலைவருக்கு வழங்கப்
பட்டுள்ளது. இத்துறை இதுவரை ரூ.2 கோடிக்கு இந்திய மற்றும் சர்வதேச அமைப்பு மூலமாக நிதி திரட்டி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. உலக நீர்பாசன ஆராய்ச்சி நிறுவனம், தரிசு நில பயிர் சாகுபடி ஆராய்ச்சி நிறுவனம் மூலம், இந்த துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, 
மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டில் 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் நீர்பாசனம் மற்றும் ஆற்றல் சேமிப்பு குறித்த புத்தகம், இங்கிலாந்தின் தலைசிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான ரவுட்லெட்ஜி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. 
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய நீர்பாசன முறைகளின் மேம்பாடு குறித்த ஆராய்ச்சி குழுவில், அழகப்பா பல்கலை சார்பில் இத்துறை பேராசிரியர் இடம் பெற்றுள்ளார், என்றார். உடன் பதிவாளர் மாணிக்கவாசகம், முன்னாள் துணைவேந்தர் மணிமேகலை, பேராசிரியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment