பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) ஆறுமுகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கூடுதல் விலைக்கு விற்றால்...
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தரமான மற்றும் தேவையான உரங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது.
மத்திய அரசு ராசாயன உரங்களுக்கு உரச்சத்து அடிப்படையிலான மானியம் வழங்கி வருகிறது. எந்தவொரு உர மூட்டையிலும் மத்திய அரசு அந்த உரத்திற்கு வழங்கும் மானியத் தொகையும், உரத்திற்கான சில்லரை விற்பனை விலையும் அச்சிடப்பட்டிருக்கும். உர விற்பனையாளர்கள் உரங்களை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டிற்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுவோர் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல் தெரிவிக்கலாம்
எனவே நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்போர் குறித்து வேளாண்மை இணை இயக்குநரின்(பொ) 99409 64438 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment