மதுரை:சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே திருமலையை சேர்ந்தவர் அழகுசுந்தரம்,29. சிறு வயதில் பெற்றோர் இறந்தனர். தந்தை விட்டுச்சென்ற ஐந்து ஏக்கர் வயலில் தன்னால் இயன்றளவு விவசாயம் செய்து தங்கையை கரை சேர்த்தார். பி.ஏ., முடித்து, கோவை வேளாண் கல்லுாரியில் இளநிலை பண்ணை தொழில்நுட்பம் பட்டம் பெற்றார். தொழில்நுட்ப கல்வி, மதுரை ஆவினில் சினை ஊசி பயிற்சி என பல சான்றிதழ் படிப்புகளை படித்தார். கரும்பு விவசாயத்தில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
கரும்பின் இரும்பு:கரும்பு நடவின் போது கரனையுடன் கூடிய கரும்பு துண்டுகள் ஊன்றப்பட்டு வந்தன. முளைத்த கரனைகளை வயலுக்கு எடுத்து செல்லும்போது இடிபாடுகளில் கரனைகளின் முனைகளில் அடிபடும். இதனால் முளைப்புத்திறன் இருக்காது. தற்போதைய தொழில்நுட்பத்தில் கரும்பின் கரனைகளை மட்டும் வெட்டி நிழல் வலைக் கூடாரத்தில் வளர்த்து, நாற்றுக்களை எடுத்துச் சென்று நடவு செய்யப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பத்தில் விவசாயிகள் நேரடியாக விதைக்கரனைகளை எடுத்து சென்று, வயலில் நடவு செய்யும்போது ஏற்படும் குறைகள் மற்றும் பொருளாதார நஷ்டம் அதிகம்.
கரும்பின் இரும்பு:கரும்பு நடவின் போது கரனையுடன் கூடிய கரும்பு துண்டுகள் ஊன்றப்பட்டு வந்தன. முளைத்த கரனைகளை வயலுக்கு எடுத்து செல்லும்போது இடிபாடுகளில் கரனைகளின் முனைகளில் அடிபடும். இதனால் முளைப்புத்திறன் இருக்காது. தற்போதைய தொழில்நுட்பத்தில் கரும்பின் கரனைகளை மட்டும் வெட்டி நிழல் வலைக் கூடாரத்தில் வளர்த்து, நாற்றுக்களை எடுத்துச் சென்று நடவு செய்யப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பத்தில் விவசாயிகள் நேரடியாக விதைக்கரனைகளை எடுத்து சென்று, வயலில் நடவு செய்யும்போது ஏற்படும் குறைகள் மற்றும் பொருளாதார நஷ்டம் அதிகம்.
புது தொழில்நுட்பம்: விவசாயி அழகுசுந்தரம் தனது பத்தாண்டு கரும்பு விவசாய அனுபவத்தை பயன்படுத்தி, 'கரும்பு விதை பெட்டி' எனும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். இரண்டடி நீளம், ஒன்றரை அடி அகலம் கொண்ட பெட்டியில் ஐந்து அடுக்கு 'ராக்' தயாரித்தார்.
ஒவ்வொரு ராக்கிலும் 150 கரும்பு கரனைகள் என மொத்தம் 750 கரனைகளை அடுக்கி, அவற்றின் மீது தென்னை நார்க்கழிவுகளை பரப்பி ஐந்து நாட்கள் நிழல் பந்தலில் உலர வைக்கிறார். ஆறாவது நாளில் கரும்பு கரனையில் இருந்து விதைகள் நல்ல முறையில் முளைத்து காணப்படுகிறது.
எடுத்து செல்ல சுலபம்: பிஸ்கட் போல் அடுக்கப்பட்ட கரனையில், முளைகட்டிய கரும்பு விதைகளுடன் இருக்கும் 'கரும்பு விதை பெட்டி'யை எடுத்து சென்று கரும்பு வயல்களில் ஊன்றலாம். இதற்கான ஆட்களை வேலைக்கு அமர்த்த தேவையில்லை. அவரவர் சொந்த நிலத்தில் கரும்பு விதை பெட்டி மூலம் கரும்பு விதையை தாமே உற்பத்தி செய்து பயிரிடலாம்.
செலவு பூஜ்ஜியம். இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. பூச்சித்தாக்குதலில் இருந்து கரனைகள் தப்ப தென்னை நார் கழிவுடன் வேப்பம் புண்ணாக்கு, சுண்ணாம்பு சிறிதளவு சேர்க்கப்படுகிறது.
அழகுசுந்தரம் கூறியதாவது: நான் கண்டுபிடித்த கரும்பு விதை பெட்டியை சக்தி சர்க்கரை ஆலை அங்கீகரித்துள்ளது. ஆலைக்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகள் எனது
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கரும்பு விதைகளை ஐந்து நாட்களில் உருவாக்கி
பயனடைந்து வருகின்றனர்.
எனது கண்டுபிடிப்பை கோவை வேளாண் பல்கலைக்கு அனுப்பியுள்ளேன். இப்புதிய
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்தும் புதிய ரக கரும்பு கரனைகளை விமானம் மூலம் சுலபமாக கொண்டு வரலாம்.
அடுத்ததாக கரும்பு கரனையின் நடுவில் துளையிட்டு சித்த மருந்துகளை செலுத்தி இயற்கை முறையில் கரும்பை விளைவிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன். இதற்கு
உதவிய திருச்சி காட்டுப்புத்துார் கே.வி.பாலு, சக்தி சர்க்கரை ஆலைக்கு நன்றி என்றார்.
தொடர்புக்கு 95858 74197.
Source : Dhinamalar
No comments:
Post a Comment