தாண்டிக்குடி:தாண்டிக்குடி அருகே கானல்காட்டில், உயர்தொழில் நுட்ப முறையில் வீரியமான மிளகு நாற்று உற்பத்தியில் விவசாயி ஈடுபட்டுள்ளார்.
கானல்காட்டை சேர்ந்த விவசாயி வீர அரசு இயற்கை முறையில் நுண்ணுயிர் அடங்கிய
கானல்காட்டை சேர்ந்த விவசாயி வீர அரசு இயற்கை முறையில் நுண்ணுயிர் அடங்கிய
வீரியமான மிளகு நாற்று உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: கோழிக்கோடு இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஸ்பசைஸ் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்று இம் முறையை செயல்படுத்தி வருகிறேன்.
எட்டுஅடி உயரமுள்ள வலை கம்பியை தரையில் ஊன்றி அதில் மக்கிய தென்னை நார், மண்புழு உரம் சமஅளவு கலந்து நிரப்ப வேண்டும். தரைப்பகுதியில் ஐந்து மிளகு தாய் கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும்.
இக்கொடி எட்டு அடி உயரம் வளர்ந்த பின் அதிலிருந்து உருவாகும் 'ஆர்த்தோ பெடிக் சூட்' எனும் கிளை உருவாகும். அதை வெட்டி நாற்றங்கால் நடவு பையில் நடவு செய்து வளர்க்கப்படுகிறது.
தாய்ச்செடி தரையில் வேர் ஊன்றியும், கம்பிகளின் நடுவே உள்ள மண்புழு உரம், தென்னை நாரில் எழும் கொடியின் வேர்பகுதி ஊட்டம் பெற்று இரு மடங்கு வீரியமுள்ள தரமான மிளகு நாற்றுக்கள் கிடைக்க உதவுகிறது. இதுகுறித்த பயிற்சி கோழிகோட்டில் விவசாயிகளுக்கு
வழங்கப்படுகிறது.
மலைப்பகுதி விவசாயிகள் பயனடையும் நோக்கில் பன்னியூர்-1, தேவம், மலபார் எக்சல் ரக நாற்றுக்கள் பசுமைக்குடில் மூலம் வலைகம்பியில் வளர்த்து வழங்க முயற்சி எடுத்து
வருவதாக கூறினார். மலைப்பகுதி ஆராய்ச்சி நிலையத்தினர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில்,விவசாயி வீரஅரசின் முயற்சி பாராட்டுக்குரியதே.
Source : Dhinamalar
No comments:
Post a Comment