வத்திராயிருப்பு :மழைக்கு வளர்ந்து பலன் கொடுக்கும் மரம், செடி, கொடி போல், மின்னலுக்கு உயிர்பெற்று வளரும் பூஞ்சை வகை தாவரங்களில் ஒன்றான 'அம்புக்காளான்', வத்திராயிருப்பு அருகே விளைச்சல் கண்டுள்ளது.வீட்டில் செயற்கையாக வளர்க்கப்படும் காளான்கள் தவிர, இயற்கையாக காடு, வயல், வரப்புகளில் தானாக வளரும் காளான்களில் மிகச்சில வகை காளான்கள் மட்டும் மின்னலை பயன்படுத்தி உயிர்பெறுகின்றன. அதில் 'அம்புக்காளான்' மிக அபூர்வ வகையை சேர்ந்தது. ஒருஅடி உயரம் வரை வளரும் இதை பறித்த அன்றே சமைத்து சாப்பிடாவிட்டால் மறுநாள் கெட்டுவிடும்.அடர்ந்த வனப்பகுதியில் மட்டும் மரத்தின் வேர்ப்பகுதியில் இவை வளர்கிறது. மரங்களின் வேர்ப்பகுதியில் கரையான்களால் அரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மரத்துகள்களில் ஆங்காங்கு மொட்டுகள் உருவாகி தயார்நிலையில் இருக்கும். மின்னல் ஏற்படும்போது அந்த ஒளியை பயன்படுத்தி உடனடியாக மொட்டுகள் விரிவடைகின்றன. அதன்பிறகு இருநாட்களுக்குள் ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்து விடுகிறது.
மருத்துவ குணம்விருதுநர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோவிலாறு அணைப்பகுதியை யொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இவை விளைந்துள்ளது. இது நெஞ்சக நோய், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை நீக்கும் மருத்துவ குணம்கொண்டது.
No comments:
Post a Comment