வாழை சாகுபடியில் நல்ல மகசூல் பெறும் நோக்கில் அதைச்சுற்றி வளரும் பக்கக்கன்றுகளைஒரு அடி அல்லது 2 அடி வளர விட்டு கத்தியால் சீவி அல்லது வெட்டி அங்கேயே வீசுவது தவறு. துவக்க காலத்தில் கிழங்கு பெருக்கம் ஏற்பட்டு பக்க கன்றுகள் கிளம்பி வரும் போது அதில் ஒரே ஒரு கன்றை மட்டும் அதுவும் ஈட்டி போன்ற இலைகள் கொண்ட கன்றுகளை மட்டும் ஒரு மரத்துக்கு ஒன்று வீதம் விட்டு விட வேண்டும்.
கிழங்கில் இருந்தும் முளை கிளம்பும் போதே கடப்பாரையின் பின் பக்கம் மொட்டையாக உள்ள பாகத்தால் குருத்துகளின் மீது அழுத்தி விட்டாலே எளிதில் மடியும். இதற்கு அதிக ஆட்செலவும் வராது. உற்பத்திக்கு உதவும் கிழங்கு, சக்தியை விரயம் செய்யாமல் அடிப்பகுதி பெருத்த தரமான தாய் மரம் உருவாக வழி ஏற்படுகிறது. மேலும் பக்கக் கன்றுகள் நல்லதாகத் தேர்வு செய்து இதர பகுதியில் நட விரும்பினால் ஈட்டி இலை உள்ளதாக ஆங்காங்கே விட்டு வைத்து இரண்டரை அடி வந்ததும் கிழங்கில் இருந்து அடிப்பகுதியை சேதம் செய்யாது துண்டிக்க வேண்டும். வாழைக்கு 3ம் மாதம் 5ம் மாதம் உரமிட வேண்டும் என்று தெரிந்தும் பரிந்துரையை விட அதிகம் இடுதல் தவறாகும்.
வாழைக்கு அதிக நீர் ஆபத்தானது. மண் கண்டம் ஏற்பட்டு அரை அடி வளமான பகுதியாக உருவாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இதில் உயிர் குலங்கள் வளர்ந்து செறிந்து இருந்தால் தான் அது நல்ல சூழல் உருவாக்கும். எனவே அதனை சிதைக்கும் விதத்தில் களைக்கொல்லி தெளிப்பதும், அதிகநீர் கட்டுதலும் பக்கக்கன்றுகளை அறுத்த தோட்டத்திலேயே வாய்க்காலில் போடுவதும் நஷ்டத்தை ஏற்படுத்தும். நுண்ணீர் பாசன உபகரணம் மூலம் வென்சுரி மூலம் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கிடைத்திட திட்டம் இட வேண்டும். களைக்கொல்லி இடாது ஊடுபயிர்கள் பலவற்றை அதாவது பெரிய வெங்காயம், அவரை, பீட்ரூட் மற்றும் ஆமணக்கு, துலுக்க சாமந்தி ஊடுபயிராக வளர்க்கலாம். மேலும் விபரம் பெற 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Source : Dhinamalar
கிழங்கில் இருந்தும் முளை கிளம்பும் போதே கடப்பாரையின் பின் பக்கம் மொட்டையாக உள்ள பாகத்தால் குருத்துகளின் மீது அழுத்தி விட்டாலே எளிதில் மடியும். இதற்கு அதிக ஆட்செலவும் வராது. உற்பத்திக்கு உதவும் கிழங்கு, சக்தியை விரயம் செய்யாமல் அடிப்பகுதி பெருத்த தரமான தாய் மரம் உருவாக வழி ஏற்படுகிறது. மேலும் பக்கக் கன்றுகள் நல்லதாகத் தேர்வு செய்து இதர பகுதியில் நட விரும்பினால் ஈட்டி இலை உள்ளதாக ஆங்காங்கே விட்டு வைத்து இரண்டரை அடி வந்ததும் கிழங்கில் இருந்து அடிப்பகுதியை சேதம் செய்யாது துண்டிக்க வேண்டும். வாழைக்கு 3ம் மாதம் 5ம் மாதம் உரமிட வேண்டும் என்று தெரிந்தும் பரிந்துரையை விட அதிகம் இடுதல் தவறாகும்.
வாழைக்கு அதிக நீர் ஆபத்தானது. மண் கண்டம் ஏற்பட்டு அரை அடி வளமான பகுதியாக உருவாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இதில் உயிர் குலங்கள் வளர்ந்து செறிந்து இருந்தால் தான் அது நல்ல சூழல் உருவாக்கும். எனவே அதனை சிதைக்கும் விதத்தில் களைக்கொல்லி தெளிப்பதும், அதிகநீர் கட்டுதலும் பக்கக்கன்றுகளை அறுத்த தோட்டத்திலேயே வாய்க்காலில் போடுவதும் நஷ்டத்தை ஏற்படுத்தும். நுண்ணீர் பாசன உபகரணம் மூலம் வென்சுரி மூலம் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கிடைத்திட திட்டம் இட வேண்டும். களைக்கொல்லி இடாது ஊடுபயிர்கள் பலவற்றை அதாவது பெரிய வெங்காயம், அவரை, பீட்ரூட் மற்றும் ஆமணக்கு, துலுக்க சாமந்தி ஊடுபயிராக வளர்க்கலாம். மேலும் விபரம் பெற 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Source : Dhinamalar
No comments:
Post a Comment