சென்னை:மாடியில் மூலிகை தோட்டம் அமைப்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலம், சென்னையில் வரும், 13ம் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:வீட்டின், பின் பகுதிகளில் உள்ள காலி இடங்கள், குறைவாக அல்லது இடப்பற்றாக்குறை இருந்தால், வீட்டு மாடி பகுதிகளில் காய்கறி மற்றும் மூலிகை பயிர்களை வளர்க்கலாம்.
ஆண்டு முழுவதும், வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான பழம், காய்கறி கிடைப்பதுடன், சிறுசிறு உடல் உபாதைகளை தவிர்த்து, வீட்டு வைத்தியம் செய்யும், மூலிகைகளும் கிடைக்கும். நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அனைத்து குடும்பத்தினர்களும், எளிய முறையில் மாடி தோட்டம் அமைத்து பராமரிக்க இப்பயிற்சி அவசியம். இதுகுறித்த ஒருநாள் பயிற்சி, வரும் 13ம் தேதி, சென்னை அண்ணா நகரில் உள்ள, வேளாண்
பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 044 --
2626 3484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி நேரம், காலை 9:30 மணி முதல், மாலை 4:30 மணி வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment